என் கவிதைகள்

Saturday, April 7, 2018

ஓவியம் வரைய தெரியாதென்று சொல்லி
அழகாய் மை தீட்டி இருக்கிறாய்...?

உதடுகள் சொல்லும் பொய்களை
மறைக்க தெரியாமல் தவிப்பது
தெரிகிறது உன் கண்ணில்....

உன்னை விட
உன் கண்களைத்தான் மிகவும்
பிடிக்கும் நீ இல்லை
என்று சொன்ன காதலை
உண்மை என்று உணர்த்தியதால்....





உன்
விழியின் வெளிச்சத்தில் 
வீழ்ந்திட்ட விட்டில் பூச்சியடி - நான் 
எழுந்துவிட நினைக்கும் போதெல்லாம் -மீண்டும் 
விழுந்து போகிறேன் - உன்
விழியழகில்.....