என் கவிதைகள்

Monday, July 5, 2010

முத்த மழை.....

சிறு சிறு ஊடல்களால்
தொலைந்து போன  புன்னகையை
கண்கள் முகம்  பார்த்தபோதும்
பாராமல் சென்றோமே...!
வலி தாங்கிடும்  வலிமை - தந்த
வறட்டு  வைராக்கியோத்தோடு...!

நீயாய் இறங்கி வருவாய் என நானும்
நானாய் இறங்கி வருவேன் என நீயும்
காத்திருந்தாலும் கடைசியில்
தோற்றுபோனோமே  காதலிடம்...!

ஆற்று  மணலில் போட்ட அணை
வெள்ள நீரில் அடித்து சிதறி
காதலெல்லாம் கண்டபடி
முத்த  மழை பொழிந்ததே
கண்ணீரில் கரைந்ததே....!











No comments:

Post a Comment