சிறகை வெட்டி
சொர்க்கத்தில் விட்டாய் -என்
சொர்க்கம் எதுவென
தெரியாமலே.....!
காதலை பறித்து
இதயத்தை தந்தாய் -
உன் மீதான - என்
என் காதலை அறியாமலே....!
காய்ந்த பின்
வேரில் நீரூற்றினாய்
உன் பிரிவில்தான்
காய்ந்து போனேன் என்று
தெரியாமல்.
உன்னால் உண்டான
காதலை உன்னோடு
சேர்க்காமலே என்னோடே
புதைந்து போன
ஒருதலை காதலில்....நான்