என் கவிதைகள்

Friday, August 10, 2018

பிரிவு

நீயில்லா ஒரு பொழுது
ஒரு யுகமாக இருக்கிறது...
அச்சம் வந்து அடிக்கடி
அடிநெஞ்சை
கசக்கி பிழிகிறது
நீ இல்லாமலே
தூர போகும் அந்த
நாட்க்களை நினைக்கும்போது

Wednesday, August 8, 2018

உன் பிறப்பை -உன்
ஊர் அறிந்ததா என்று தெரியாது
ஆனால் உன் இறப்பு  -இந்த
உலகமே அறிந்தது....!
அமுத சுவை என்னவென்று
எங்களுக்கு தெரியாது -ஆனால்
தமிழ் சுவையை -நீ
நன்கு அறியச்செய்தாய்
சில நூறாண்டுகள் -நீ மட்டுமே
கட்டி காத்த எம்
தாய் மொழியாம் தமிழை -இனி
வரும் பலநூறாண்டுகள் -இந்த
நரிகள் கூட்டத்தில் -எங்களால்
காத்திட முடியுமா என்று
தெரியாது....அன்று
நீ மட்டுமில்லை என்றால்
இன்று நாங்கள் இந்தி பேசி
இந்த நாளை கடத்திக்கொண்டு
இருந்திருப்போம்...உன் போல்
இனியொரு தலைவனை
இத்தலைமுறை கண்டிடுமோ
எம் தமிழை
மெல்ல சாகாமல்
காக்க......