என் கவிதைகள்

Monday, December 20, 2021

கலவித் தீ..!

 

உன்
முத்தாங்களால் துவங்கிய
கலவியின் முதல் எழுத்து
ஃ என்ற இடத்தில் முடிவுறாமல்
மீண்டும் துவங்கிறது.....
கலவியின் தீ
கனிந்து அணையப்
போகிற நொடிகளில்...
துவங்குகிறது....
ஒரு பெரும்..
காட்டு தீ....
ஒரு சில மழை துளிகள்
பாய்ந்த பரவசத்தில்
அனைத்து போகும்- ஆணுக்கு
ஆனால் அப்போது
பெரும் வெள்ளம்
கேட்கிறது....பெண்மை.
மணி முள்ளோ
சுத்தி சுத்தி அசந்து போகிறது
முற்று பேரும் நொடி எதுவென்று
அறியாது....
கலவியின் எல்லை
நீள அகல அழகில் இல்லை
அது நேரத்தின் தூரத்தில்
இருக்கிறது....
அத்தனை தூரம்
அழைத்து செல்வதில்
ஆண்கள்தான் அதிகம்
அசந்து போகிறார்கள்
ஆண்டவன் வினோதமானவன்.....!

Friday, August 10, 2018

பிரிவு

நீயில்லா ஒரு பொழுது
ஒரு யுகமாக இருக்கிறது...
அச்சம் வந்து அடிக்கடி
அடிநெஞ்சை
கசக்கி பிழிகிறது
நீ இல்லாமலே
தூர போகும் அந்த
நாட்க்களை நினைக்கும்போது

Wednesday, August 8, 2018

உன் பிறப்பை -உன்
ஊர் அறிந்ததா என்று தெரியாது
ஆனால் உன் இறப்பு  -இந்த
உலகமே அறிந்தது....!
அமுத சுவை என்னவென்று
எங்களுக்கு தெரியாது -ஆனால்
தமிழ் சுவையை -நீ
நன்கு அறியச்செய்தாய்
சில நூறாண்டுகள் -நீ மட்டுமே
கட்டி காத்த எம்
தாய் மொழியாம் தமிழை -இனி
வரும் பலநூறாண்டுகள் -இந்த
நரிகள் கூட்டத்தில் -எங்களால்
காத்திட முடியுமா என்று
தெரியாது....அன்று
நீ மட்டுமில்லை என்றால்
இன்று நாங்கள் இந்தி பேசி
இந்த நாளை கடத்திக்கொண்டு
இருந்திருப்போம்...உன் போல்
இனியொரு தலைவனை
இத்தலைமுறை கண்டிடுமோ
எம் தமிழை
மெல்ல சாகாமல்
காக்க......




Monday, July 30, 2018

சொர்க்கம்....
பூவையும் பூவும் நிறைந்திருக்க
தேனும் பாலும் புசித்திருக்க
பஞ்சுமெத்தயும் பட்டாடையும் -என
எதற்குமே பஞ்சமில்லை -ஆனால்
மனதிற்க்கோ எதிலுமே  தஞ்சமில்லை
தேவதை போல நீயிருக்க
வேறென்ன இருக்கிறது
சொர்க்கம்.....






Saturday, April 7, 2018

ஓவியம் வரைய தெரியாதென்று சொல்லி
அழகாய் மை தீட்டி இருக்கிறாய்...?

உதடுகள் சொல்லும் பொய்களை
மறைக்க தெரியாமல் தவிப்பது
தெரிகிறது உன் கண்ணில்....

உன்னை விட
உன் கண்களைத்தான் மிகவும்
பிடிக்கும் நீ இல்லை
என்று சொன்ன காதலை
உண்மை என்று உணர்த்தியதால்....





உன்
விழியின் வெளிச்சத்தில் 
வீழ்ந்திட்ட விட்டில் பூச்சியடி - நான் 
எழுந்துவிட நினைக்கும் போதெல்லாம் -மீண்டும் 
விழுந்து போகிறேன் - உன்
விழியழகில்.....




Tuesday, February 13, 2018

பணியின் பரபரப்பில் 
பம்பரமாய் சுழல்கிறேன் -அன்பே 
உந்தன் நினைவுகளின் ஊடே-உனை 
பார்க்க முடியா தூரமில்லை ஆனால் 
ஒரு வார்த்தைக்  கூட பேசிட 
நேரமில்லை...
களைத்துப்போன கண்கள் 
உனை தேடுதடி..கண்ணயர்ந்து 
உன் தோள் சாய்ந்து  இளைப்பார....