என் கவிதைகள்

Thursday, May 4, 2017

நீர்....

மழையே அருள் புரிவாயா..??
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?
வெட்க்கையும் வேர்வையும் 
வெறுப்பாய் இருக்கிறதே...!
என் முப்பாட்டன் தாத்தன் எல்லாம்
கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தில்
நீந்தி குளித்தான்....!
என் அப்பனோ நிரம்பிய
குளத்திலும் கிணத்திலும்
நீந்தி குளித்தான்...!
இன்று நானோ என்
கணுக்கால் நனைய
மூழ்க முடியாமலும்
நீந்த முடியாமலும்
மொண்டு குளிக்கிறேன்...
நாளை என் பிள்ளை குளிப்பனா
என்பதைவிட தாகம் தீர
குடிப்பானா என்றென்னும் போது
ஈரக்குலை நடுங்குதம்மா...!
மழையே அருள் புரிவாயா..??
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?

Monday, May 1, 2017

தேடல்

நீ- என்ற உன்னை
நீ இல்லாதவர்களிடம்
எல்லாம் தேடினேன்
சிலரோடு சிரித்தேன்
சிலரோடு பழகினேன்
சிலர் மீது  பாசம்  வைத்தேன்
சிலரோடு சண்டையிட்டேன்
சில நாள்  கழித்துதான் தெரிந்தது
அங்கெல்லாம் நீ இல்லை என்று
எங்கெல்லாம் நீ இருப்பாய்  என்று
நினைத்தேனோ அங்கெல்லாம்
நீ இல்லை....!
நீ இருந்த இடத்திலேயெல்லாம்
 நானும்  தேடிட வில்லை...!

என்னருகே நீ இருந்த போதிலும்
இருவருக்குமே தெரியவில்லை
இந்த இரு  இதயமும்தான்
இடம் மாற போகுது என்று...
நீயும் சொல்லவில்லை
நானும் தேடவில்லை....
உணர்ந்து கொண்டோம் - இதுதான்
காதலென்று....!