மழையே அருள் புரிவாயா..??
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?
வெட்க்கையும் வேர்வையும்
வெறுப்பாய் இருக்கிறதே...!
வெறுப்பாய் இருக்கிறதே...!
என் முப்பாட்டன் தாத்தன் எல்லாம்
கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தில்
நீந்தி குளித்தான்....!
கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தில்
நீந்தி குளித்தான்....!
என் அப்பனோ நிரம்பிய
குளத்திலும் கிணத்திலும்
நீந்தி குளித்தான்...!
குளத்திலும் கிணத்திலும்
நீந்தி குளித்தான்...!
இன்று நானோ என்
கணுக்கால் நனைய
மூழ்க முடியாமலும்
நீந்த முடியாமலும்
மொண்டு குளிக்கிறேன்...
கணுக்கால் நனைய
மூழ்க முடியாமலும்
நீந்த முடியாமலும்
மொண்டு குளிக்கிறேன்...
நாளை என் பிள்ளை குளிப்பனா
என்பதைவிட தாகம் தீர
குடிப்பானா என்றென்னும் போது
ஈரக்குலை நடுங்குதம்மா...!
என்பதைவிட தாகம் தீர
குடிப்பானா என்றென்னும் போது
ஈரக்குலை நடுங்குதம்மா...!
மழையே அருள் புரிவாயா..??
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?
No comments:
Post a Comment