என் கவிதைகள்

Wednesday, March 29, 2017

அவள்
வீட்டை
கடக்கும்போதெல்லாம்...!
அன்னிச்சை செயலாய்
அண்ணாந்து பார்க்கிறேன்..!
அவள்  குடி  பெயர்ந்த  பின்னும்
அந்த பால்கனியை.....!
  

Sunday, March 26, 2017

களவு கொடுத்த நானும் 
பிராது கொடுக்கவில்லை 
களவாடிய  நீயும் 
கைது  செய்ய  படவில்லை 
காரணம் காதல்....! 



படைத்தவன்
பாரபட்சம் இன்றி 
வரைந்து  அனுப்பிவிட்டான் - உன் 
கண்களை - நீ 
மேலும் மை தீட்டி - என்னை 
கொல்லாதே...!

Tuesday, March 21, 2017

ஏவாள் மீதான
ஆதாமின் காதலை
ஆப்பிள் கனிக்குள்
வைத்தான்  கடவுள்...!
என் காதலை
உனக்குள் வைத்தது போல்...!


Saturday, March 18, 2017

பறக்க தெரிந்த
பறவை என்று தெரிந்தும்...!
பறந்து  செல்லாமல்
சிறைபட்டிருக்கிறேன்- உன்
இதய கூட்டில்...!

நான் ஒன்றும் 
கவிஞன் இல்லை - ஏனோ 
உனை பார்த்த பின்புதான் 
இப்படி ஆகிவிட்டேன்....!