என் கவிதைகள்

Wednesday, August 9, 2017

ஒரு பக்கம் குளிரிலும்
ஒரு பக்கம் கனலிலும் 
ஒரு உடல் தவிக்குது...!  
வியர்க்கவா நடுங்கவா-என 
என் உடல் எனையே  கேக்குது...! 
இது என்ன தெரியல 
ஒண்ணுமே புரியல 
இதுவரை கண்டதில்லை
இப்படி ஒரு  இம்சைகளை

உன் சிரிப்பை பார்த்ததுமே
உள்  மனசுல ஓட்டிகிட்ட
இதயத்த இருக்கமா கட்டிக்கிட்ட
ஒத்த வார்த்த பேசலயே  - ஆனா
பத்து ஜென்மம் பார்த்துகிட்டு
பழகியது  போலவே  இருக்கு..!

கண்விழித்த  நேரத்திலும்
கனவு வந்து கனக்குதடி
உன்னோட நெனப்புலத்தான்
எம் பொழப்ப கெடுக்குதடி

இத்தனை சிரமத்திலும் - என்
இதயம் சிலிர்க்குதடி
இது மட்டுந்தான்  காதலா
இன்னும் கூட இருக்கா
சொல்லிவிடு -காதலியே...!


















Tuesday, August 1, 2017

நின் பாதம் பட்டு துளிர் விட்டது
புற்கள்... !
உன் கேசம் கலைத்து  சென்ற
காற்றில்  வீசியது வாசம்...!
உன் துப்பட்டாவின் ஸ்பரிசத்தில்
பூத்தது  பூக்கள்...!
உன் குரல் கேட்டு குயில்கள் கற்றது
சங்கீதம்...!
உன் விரல் பட்ட பேருந்து சன்னல்
கம்பியில் வீணையின் ஸ்வரங்கள்...!
நீ அமர்ந்து விட்டு சென்ற பூங்காவின்
இருக்கைகள் ஆனது சிம்மாசனம்...!
உன் கண்களை பார்த்து காதலில் விழுந்த
என்னில் மட்டும் என்ன  தவறுகள் இருக்க முடியும்....?????










நீ இல்லாத வாழ்வினிலே.....!

தொலைத்த பின்புதான்
தேடினேன் -நீ
கிடைத்த இடங்களில் எல்லாம்
அருகில் இருந்த போது தெரியவில்லை
அருமை ... இப்போது
அரை நொடி கூட நரகமடி....
நாளை கடப்பதே வேலையாகி போனபின்
காலை  மாலை எதுவென்றே  தெரியவில்லை
நீ இல்லாத  வாழ்வினிலே.....!