என் கவிதைகள்

Tuesday, August 1, 2017

நின் பாதம் பட்டு துளிர் விட்டது
புற்கள்... !
உன் கேசம் கலைத்து  சென்ற
காற்றில்  வீசியது வாசம்...!
உன் துப்பட்டாவின் ஸ்பரிசத்தில்
பூத்தது  பூக்கள்...!
உன் குரல் கேட்டு குயில்கள் கற்றது
சங்கீதம்...!
உன் விரல் பட்ட பேருந்து சன்னல்
கம்பியில் வீணையின் ஸ்வரங்கள்...!
நீ அமர்ந்து விட்டு சென்ற பூங்காவின்
இருக்கைகள் ஆனது சிம்மாசனம்...!
உன் கண்களை பார்த்து காதலில் விழுந்த
என்னில் மட்டும் என்ன  தவறுகள் இருக்க முடியும்....?????










No comments:

Post a Comment