என் கவிதைகள்

Wednesday, August 9, 2017

ஒரு பக்கம் குளிரிலும்
ஒரு பக்கம் கனலிலும் 
ஒரு உடல் தவிக்குது...!  
வியர்க்கவா நடுங்கவா-என 
என் உடல் எனையே  கேக்குது...! 
இது என்ன தெரியல 
ஒண்ணுமே புரியல 
இதுவரை கண்டதில்லை
இப்படி ஒரு  இம்சைகளை

உன் சிரிப்பை பார்த்ததுமே
உள்  மனசுல ஓட்டிகிட்ட
இதயத்த இருக்கமா கட்டிக்கிட்ட
ஒத்த வார்த்த பேசலயே  - ஆனா
பத்து ஜென்மம் பார்த்துகிட்டு
பழகியது  போலவே  இருக்கு..!

கண்விழித்த  நேரத்திலும்
கனவு வந்து கனக்குதடி
உன்னோட நெனப்புலத்தான்
எம் பொழப்ப கெடுக்குதடி

இத்தனை சிரமத்திலும் - என்
இதயம் சிலிர்க்குதடி
இது மட்டுந்தான்  காதலா
இன்னும் கூட இருக்கா
சொல்லிவிடு -காதலியே...!


















No comments:

Post a Comment