என் கவிதைகள்

Tuesday, February 13, 2018

பணியின் பரபரப்பில் 
பம்பரமாய் சுழல்கிறேன் -அன்பே 
உந்தன் நினைவுகளின் ஊடே-உனை 
பார்க்க முடியா தூரமில்லை ஆனால் 
ஒரு வார்த்தைக்  கூட பேசிட 
நேரமில்லை...
களைத்துப்போன கண்கள் 
உனை தேடுதடி..கண்ணயர்ந்து 
உன் தோள் சாய்ந்து  இளைப்பார.... 



உன்
நெற்றி வியர்வை
துளிகளை கண்டு
தூரிகை வீசுகிறேன்
அன்பே -உன்
மீதான காதலால் அல்ல
வியர்ப்பது என்னவோ உனக்குத்தான்
நனைந்து போவது என்னவோ
நான்
என்பதால்...!

நீ செல்லும் பாதையெல்லாம்
மலர்களின் இதழ்களை
தூவுகிறேன் -உன்
பட்டு பாதத்தில் முள்
குத்திவிடும் என்ற பாசத்தில் -அல்ல
முள் பட்டால் என்
இதயத்தில் இரத்தம் கசிந்திடும் என்பதால்....!


















விரும்பியதும் -நீ
விலகியதும் -நீ 
தளும்பியதும் - நீ
தவறியதும் - நீ
தொடர்ந்தவளும் - நீ
எனைவிட்டு தொலைந்தவளும் -நீ
காதலும் - நீ
காயமும் -நீ
வேதமும் - நீ
என் வேதனையும் நீ...
மரமாகத்தானே நின்றேன்
கொடியாக ஏன் படர்ந்தாய்...
பறவயாகத்தானே பறந்திருந்தேன் -உன்
கூட்டுக்குள் ஏன் சிறைவைத்தாய்...
சிதிலமாய் சிதைந்து போனது -என்
காதல் மட்டுமில்லை
நானும்தான்....

தூக்கம் தொலைத்த இரவுகளில் 
துணையாய் இருப்பது -உந்தன் 
நினைவுகள் எனில்..
தூங்கிப்போன இரவுகளிலோ  -உந்தன் 
கனவுகள்....