என் கவிதைகள்

Friday, August 10, 2018

பிரிவு

நீயில்லா ஒரு பொழுது
ஒரு யுகமாக இருக்கிறது...
அச்சம் வந்து அடிக்கடி
அடிநெஞ்சை
கசக்கி பிழிகிறது
நீ இல்லாமலே
தூர போகும் அந்த
நாட்க்களை நினைக்கும்போது

Wednesday, August 8, 2018

உன் பிறப்பை -உன்
ஊர் அறிந்ததா என்று தெரியாது
ஆனால் உன் இறப்பு  -இந்த
உலகமே அறிந்தது....!
அமுத சுவை என்னவென்று
எங்களுக்கு தெரியாது -ஆனால்
தமிழ் சுவையை -நீ
நன்கு அறியச்செய்தாய்
சில நூறாண்டுகள் -நீ மட்டுமே
கட்டி காத்த எம்
தாய் மொழியாம் தமிழை -இனி
வரும் பலநூறாண்டுகள் -இந்த
நரிகள் கூட்டத்தில் -எங்களால்
காத்திட முடியுமா என்று
தெரியாது....அன்று
நீ மட்டுமில்லை என்றால்
இன்று நாங்கள் இந்தி பேசி
இந்த நாளை கடத்திக்கொண்டு
இருந்திருப்போம்...உன் போல்
இனியொரு தலைவனை
இத்தலைமுறை கண்டிடுமோ
எம் தமிழை
மெல்ல சாகாமல்
காக்க......




Monday, July 30, 2018

சொர்க்கம்....
பூவையும் பூவும் நிறைந்திருக்க
தேனும் பாலும் புசித்திருக்க
பஞ்சுமெத்தயும் பட்டாடையும் -என
எதற்குமே பஞ்சமில்லை -ஆனால்
மனதிற்க்கோ எதிலுமே  தஞ்சமில்லை
தேவதை போல நீயிருக்க
வேறென்ன இருக்கிறது
சொர்க்கம்.....






Saturday, April 7, 2018

ஓவியம் வரைய தெரியாதென்று சொல்லி
அழகாய் மை தீட்டி இருக்கிறாய்...?

உதடுகள் சொல்லும் பொய்களை
மறைக்க தெரியாமல் தவிப்பது
தெரிகிறது உன் கண்ணில்....

உன்னை விட
உன் கண்களைத்தான் மிகவும்
பிடிக்கும் நீ இல்லை
என்று சொன்ன காதலை
உண்மை என்று உணர்த்தியதால்....





உன்
விழியின் வெளிச்சத்தில் 
வீழ்ந்திட்ட விட்டில் பூச்சியடி - நான் 
எழுந்துவிட நினைக்கும் போதெல்லாம் -மீண்டும் 
விழுந்து போகிறேன் - உன்
விழியழகில்.....




Tuesday, February 13, 2018

பணியின் பரபரப்பில் 
பம்பரமாய் சுழல்கிறேன் -அன்பே 
உந்தன் நினைவுகளின் ஊடே-உனை 
பார்க்க முடியா தூரமில்லை ஆனால் 
ஒரு வார்த்தைக்  கூட பேசிட 
நேரமில்லை...
களைத்துப்போன கண்கள் 
உனை தேடுதடி..கண்ணயர்ந்து 
உன் தோள் சாய்ந்து  இளைப்பார.... 



உன்
நெற்றி வியர்வை
துளிகளை கண்டு
தூரிகை வீசுகிறேன்
அன்பே -உன்
மீதான காதலால் அல்ல
வியர்ப்பது என்னவோ உனக்குத்தான்
நனைந்து போவது என்னவோ
நான்
என்பதால்...!

நீ செல்லும் பாதையெல்லாம்
மலர்களின் இதழ்களை
தூவுகிறேன் -உன்
பட்டு பாதத்தில் முள்
குத்திவிடும் என்ற பாசத்தில் -அல்ல
முள் பட்டால் என்
இதயத்தில் இரத்தம் கசிந்திடும் என்பதால்....!


















விரும்பியதும் -நீ
விலகியதும் -நீ 
தளும்பியதும் - நீ
தவறியதும் - நீ
தொடர்ந்தவளும் - நீ
எனைவிட்டு தொலைந்தவளும் -நீ
காதலும் - நீ
காயமும் -நீ
வேதமும் - நீ
என் வேதனையும் நீ...
மரமாகத்தானே நின்றேன்
கொடியாக ஏன் படர்ந்தாய்...
பறவயாகத்தானே பறந்திருந்தேன் -உன்
கூட்டுக்குள் ஏன் சிறைவைத்தாய்...
சிதிலமாய் சிதைந்து போனது -என்
காதல் மட்டுமில்லை
நானும்தான்....

தூக்கம் தொலைத்த இரவுகளில் 
துணையாய் இருப்பது -உந்தன் 
நினைவுகள் எனில்..
தூங்கிப்போன இரவுகளிலோ  -உந்தன் 
கனவுகள்....