பொன்
மஞ்சளும்
குங்குமம் சந்தனம்
பூசிய – உன்
மென் வதனம் – அதில்
மெல்லிய
தென்றலாய் வீசிய
உன்
அழகில் –நான்
மதி மயங்கித்தான்
போனேனடி.....
உன்
இருள் சூழ்ந்த
சுருள் குழல்
வனத்திலே
தொலைந்துபோன – கரும்
புரவியானேனே....
மார்கழி
நடுநிசி இரவினில்
பொழிந்திடும்
பனியினில்
பளிச்சென
மலர்ந்திட்ட
மலரானேனே
உன்
சிரிப்பில்....!
உன்
மை பூசிய
விழிகளின்
கருமையின்
அழகினில்
மயங்கிய சூரியன்
இருள் சூழ்வதாய் –
கண்டு
மாலை வரும் முன்னே
மறைந்தே
போனதடி....!
காதலியே...!