என் கவிதைகள்

Monday, January 30, 2017




பொன்
மஞ்சளும்
குங்குமம் சந்தனம்
பூசிய உன்
மென் வதனம் அதில்
மெல்லிய
தென்றலாய் வீசிய  
உன்
அழகில் நான்
மதி மயங்கித்தான்
போனேனடி.....

உன்
இருள் சூழ்ந்த
சுருள் குழல் வனத்திலே
தொலைந்துபோன கரும்
புரவியானேனே....

மார்கழி
நடுநிசி இரவினில்
பொழிந்திடும்
பனியினில் பளிச்சென
மலர்ந்திட்ட மலரானேனே
உன்
சிரிப்பில்....!

உன்
மை பூசிய விழிகளின்
கருமையின் அழகினில்
மயங்கிய சூரியன்
இருள் சூழ்வதாய் – கண்டு
மாலை  வரும் முன்னே
மறைந்தே போனதடி....!
காதலியே...! 

  

Friday, January 27, 2017

நீ இல்லை
நீ  இல்லாதது போலில்லை
நீ என் நினைவில் கூட இல்லை
நினைத்து பார்க்க நேரமும் இல்லை...
நீ பிரிந்து  போய்
நீண்ட நாட்களை கடந்ததாய் சொன்னார்கள்
நீ இருந்த இடங்களில்  தேடிடவில்லை  
எப்படி தேடிடும்....
இதயத்தில் இருப்பவரை
இதயம் தேடிடுமா....? என்று
எனக்கு  நானே சமாதானம்
சொன்னாலும்...!
தொண்டைக்குள் சிக்கிய
முள் சில நேரம்
வலிக்கத்தான் செய்கிறது....  






Saturday, January 7, 2017

நீ
விழிக்கிற வரையில் - உனையே
பார்த்திருப்பேன் -உன்
நித்திரையை
ரசித்திருப்பேன்....
நீ
துயிலெழும் நேரத்திலே
உனை விழிக்க செய்வேன்
சிட்டுக்குருவிகள்
சிணுங்கள் ஓசை கொண்டு....!
உன்
தூக்கம் இன்னும்
மிச்சம் இருந்தால்
மீண்டும் தூங்க வைப்பேன்
தோள்மீது தாலாட்டி
என் அன்பு மகளே.....!!!!

Tuesday, January 3, 2017

முழுசாய் ஒரு நிமிடம் கூட
முடியவில்லை
கண்ணே...!
முகத்தருகே
முகம் இருந்த போதிலும்
விழித்து பார்க்க
முடியாமல்
மூழ்கி போகிறோம்
ஒவ்வொரு முறையும்....
முத்த நிமிடங்களில்...!



நீ 
நடந்து வருகையில்
பாதம் பட்டு  
பூமிக்கூட  
அதிர்ந்துவிட கூடாது - என்று 
நினைக்கிறாய்....! 
ஆனால் 
உன்னாலே என்னுள்ளே 
உண்டான பூகம்பத்தை 
அறியாமலே.......!!!!