என் கவிதைகள்

Friday, January 27, 2017

நீ இல்லை
நீ  இல்லாதது போலில்லை
நீ என் நினைவில் கூட இல்லை
நினைத்து பார்க்க நேரமும் இல்லை...
நீ பிரிந்து  போய்
நீண்ட நாட்களை கடந்ததாய் சொன்னார்கள்
நீ இருந்த இடங்களில்  தேடிடவில்லை  
எப்படி தேடிடும்....
இதயத்தில் இருப்பவரை
இதயம் தேடிடுமா....? என்று
எனக்கு  நானே சமாதானம்
சொன்னாலும்...!
தொண்டைக்குள் சிக்கிய
முள் சில நேரம்
வலிக்கத்தான் செய்கிறது....  






No comments:

Post a Comment