என் கவிதைகள்

Monday, January 30, 2017




பொன்
மஞ்சளும்
குங்குமம் சந்தனம்
பூசிய உன்
மென் வதனம் அதில்
மெல்லிய
தென்றலாய் வீசிய  
உன்
அழகில் நான்
மதி மயங்கித்தான்
போனேனடி.....

உன்
இருள் சூழ்ந்த
சுருள் குழல் வனத்திலே
தொலைந்துபோன கரும்
புரவியானேனே....

மார்கழி
நடுநிசி இரவினில்
பொழிந்திடும்
பனியினில் பளிச்சென
மலர்ந்திட்ட மலரானேனே
உன்
சிரிப்பில்....!

உன்
மை பூசிய விழிகளின்
கருமையின் அழகினில்
மயங்கிய சூரியன்
இருள் சூழ்வதாய் – கண்டு
மாலை  வரும் முன்னே
மறைந்தே போனதடி....!
காதலியே...! 

  

No comments:

Post a Comment