நீ
விழிக்கிற வரையில் - உனையே
பார்த்திருப்பேன் -உன்
நித்திரையை
ரசித்திருப்பேன்....
நீ
துயிலெழும் நேரத்திலே
உனை விழிக்க செய்வேன்
சிட்டுக்குருவிகள்
சிணுங்கள் ஓசை கொண்டு....!
உன்
தூக்கம் இன்னும்
மிச்சம் இருந்தால்
மீண்டும் தூங்க வைப்பேன்
தோள்மீது தாலாட்டி
என் அன்பு மகளே.....!!!!
No comments:
Post a Comment