என் கவிதைகள்

Thursday, December 29, 2016

அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு ...

அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு
அவள்தான் அழகி என்றார்கள் 
அவளோடு பேசிவிட துடித்தார்கள் 
விரல் நுனி பட்டுவிடாதா என ஏங்கினார்கள் - ஆனால் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு ... 


அதிகம் பேசமாட்டாள் என்றார்கள் 
அதுவும் அவளுக்கு அழகுதான் என்றார்கள் 
சின்ன சிரிப்புதான் 
அவளின் அத்தனைக்குமான பதில் என்றார்கள் 
சுருள் கூந்தலும் கன்னத்தில் சின்ன பருவும் காணமல் 
செத்துபோய்  இருப்பேனோ என்று -சிலாகித்தார்கள், 
அவளை எப்படியாவது பார்த்து விடு
என்றார்கள்  -ஆனால் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....

கல்நெஞ்சிலும் காதல் வரும் 
கண்மூடாமலே கனவுகள் வரும் 
காகிதம்  இல்லாமலே  கவிதை  வரும் 
கன நேரமும் கடந்து போகாது 
அவளின்  நினைவின்றி  என்றார்கள் -ஆனால் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....


பார்த்த நொடியில் பரிதவித்து போவதைவிட 
பார்க்காத நொடிகள் பாரமாய்  இருக்க  வேண்டும்.... 
கண்களால் பார்த்திட  வேண்டும் 
உள்ளத்தால் உருகிட வேண்டும் 
அவளின் அத்தனை அழகும் ஒன்றாய் 
கொன்றாலும் அதனால் வந்துவிடுமா -காதல் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....

Monday, December 26, 2016

கைக்குட்டை

அவள்
இதழோடு ஒற்றியெடுத்த கைகுட்டையை
கலவாடிக்கொண்டேன்
எங்கள் தேநீர்  சந்திப்பின் நினைவாக......

இன்று அவளின்
இதழும் இல்லை அவளும் இல்லை
கண்ணீரை  மட்டும் துடைத்துக்கொண்டு
இருக்கிறேன்-அவளின் நினைவாக
அந்த கைகுட்டையால்....
 


Saturday, December 24, 2016

அன்பு மகளே.....



என் அஞ்சு விரல்களுக்குள்
உன் பிஞ்சு விரல்கள்....
தட்டு தடுமாறி நடக்கிறாய்
தவறி விழாமல் நடக்கிறாய்.....













நீ கேட்பது என்னவோ....
அஞ்சு ரூபாய் பஞ்சு மிட்டாயும் பலூனும்தான்
அதற்கே அந்த வானவில்லையும் வண்ண நிலவையும்
வளைத்து கொடுத்து விட்டதை போல பெருமிதம் கொள்வாயே....















நீ கதவிடுக்கி்ல் விரல் மாட்டி அழுத போது -அந்த அறைக்கு கதவே வேண்டாம் என தூக்கி எறிந்தேன்....











நீ விழுந்த காயத்தோடு கண்ணீருமாய் நின்ற போது
வீதி எங்கும் விரவி கிடந்த கற்களை தூக்கி எறிந்தேன்....













நீ விலக முடியாமல் விலகி சென்றாய் அழுகையுடன்
உன் முதல் வகுப்பிற்குள்....நானும்தான் விலகி விடாமல் காத்திருந்தேன் நீ வரும் வரை...



நீ பருவ வயதிலும்-நான்
பார்த்து பார்த்து வளர்த்த பச்சை குழந்தைதான்...

நீ  காதலிப்பதாய் சொன்னபோது 
கலங்கித்தான் போனேனம்மா.....
நான் வேண்டாமென்று  









பாசமாய் சொன்னதெல்லாம் வேஷமாய் இருந்தது.....
நான் அழுது அழுது சொன்னதெல்லாம் -உனக்கு
ஆத்திரமாய் இருந்தது.....

இன்று என் அஞ்சு விரல்களுக்குள்
உன் விரல்கள்....இல்லை
நீ நடக்க தெரிந்தும்...
தட்டு தடுமாறி நடக்கிறாய்-ஆனால்
தவறி விழுந்து விட்டாயே.....

நீ விரும்பியே விலகி சென்றுவிட்டாய்
அந்த அர்த்தமில்லாதவனோடு....














நான் விலகி விடாமல் காத்திக்கிறேன் - நீ  வாழ்க்கையின் அர்த்தம் புரியும் வரை....
"என் அன்பு மகளே......!"

காதலில் விழுந்தேன்

சிறு துளி தேனுக்கு
ஆசைப்பட்ட- எறும்பு
தத்தளித்து செத்து போனது
தேன் குவளைக்குள் விழுந்து

 நான் இன்னுமும்
செத்து போகவில்லை - ஆனால் 
தத்தளித்துக்கொண்டு இருக்கிறேன் - உன் 
காதலில் விழுந்து.....


அதிகாலை பொழுது - அங்கே

துகிலெழும் நிமிடங்கள்

விடியலும் வெளிச்சமும்...

வெறுப்பாய் இருக்கும்



அடர் இருள் சூழலில்

வழி தேடி அலைகளில்

தூரத்தில் தெரியும் அதே வெளிச்ச கீற்று

வரமாய் இருக்கும்....



உன் துயில் கலைக்கும்

வெளிச்ச துயரமாய் தெரிகிறேன் ....அன்பே

இருளில் தேடுகிறாய் - உன்னவனை

உன் வெளிச்ச கீற்றும் நான் என்பதை அறியாமல்.......

நாம்



உனக்கும் எனக்குமான காதலை - மறுக்க
உன்னவர்களும் என்னவர்களும் -சொல்வார்கள்
ஆயிரம் -காரணங்கள் ஆனால்
உனக்கும் எனக்குமான காதலுக்கு -காரணம்
ஒன்றுமட்டும்தான் -அது
நாம் என்பதை தவிர ஒன்றும் இல்லை...


Friday, December 23, 2016

அயித்த மவ




பத்து வயசுல பார்த்த புள்ள....
பத்து வருஷம் போன பின்ன....
பாட்டி வீட்டுக்கு வந்தவள....
பாத்துக்கோடி உன் மாமனன்னு...
சொந்த பந்தம் சொல்லயில....
தேக்கி வச்ச காதலெல்லாம்....
உன் உருவில் வந்தது போல்
உள் உணர்வு சொல்லியதே....!


வயக்காட்ட சுத்தி காட்ட
அத்த மவ ஆச பட்ட....
வரப்பில் நீயும் நடக்கையிலே
வழுக்கி விழுந்த சேத்துக்குள்ளே...
கை பிடிச்சி தூக்கையிலே....
ஐவிரலும் தீண்டையிலே...
செத்துத்தான் போனோமடி...














துக்க வீட்டில் ஊருசனம்..
அத்தனையும் கூடி அழ...
கூட்டத்துல உன்ன மட்டும்-தேடுதடி,
கண்ணிரண்டும் பார்த்துகிட்டோம்
உள் மனச மாத்திகிட்டோம்....!












சொந்தமெல்லாம் சேர்ந்து நின்னு
சேர்த்துத்தான் வைக்கும்முன்னு
போயிதான் நின்னோம் புள்ள...
ரத்த சொந்தம் சேர்ந்துபுட்டா
புள்ள பொறந்தா ஆவாதுன்னு..
சேரத்தான் வேணாமுன்னு
மல்லுக்கு நின்னாங்களே....














புள்ள குட்டி வேணாம் புள்ள...
எம்புள்ளயா நீயாக....
உம்புள்ளயா நானாக...
மொத்த வாழ்வையும் வாழ்வோம் என்றேனடி...!

காதலெல்லாம் பொய்யின்னு சொல்லி
காணமல் போனவளே....
கல்யாணம் ஆனபின்னே
கனவனோடு வந்தவளே....


வரப்பு வெளியும்
துக்க வீடும் இப்போதான்
தொண்டைய அடைக்குதடி....!!
கண்ணீரில் கரையுதுடி..!




உன்
கருங் கூந்தலை
கலைத்து போடாதே....
கார்மேகம் சூழ்ந்ததாய் எண்ணி 
அடை மழை பெய்யுமென
அறிவிப்பு வெளியிடுகிறது
வானிலை மையம்....