என் கவிதைகள்

Saturday, December 24, 2016

அன்பு மகளே.....



என் அஞ்சு விரல்களுக்குள்
உன் பிஞ்சு விரல்கள்....
தட்டு தடுமாறி நடக்கிறாய்
தவறி விழாமல் நடக்கிறாய்.....













நீ கேட்பது என்னவோ....
அஞ்சு ரூபாய் பஞ்சு மிட்டாயும் பலூனும்தான்
அதற்கே அந்த வானவில்லையும் வண்ண நிலவையும்
வளைத்து கொடுத்து விட்டதை போல பெருமிதம் கொள்வாயே....















நீ கதவிடுக்கி்ல் விரல் மாட்டி அழுத போது -அந்த அறைக்கு கதவே வேண்டாம் என தூக்கி எறிந்தேன்....











நீ விழுந்த காயத்தோடு கண்ணீருமாய் நின்ற போது
வீதி எங்கும் விரவி கிடந்த கற்களை தூக்கி எறிந்தேன்....













நீ விலக முடியாமல் விலகி சென்றாய் அழுகையுடன்
உன் முதல் வகுப்பிற்குள்....நானும்தான் விலகி விடாமல் காத்திருந்தேன் நீ வரும் வரை...



நீ பருவ வயதிலும்-நான்
பார்த்து பார்த்து வளர்த்த பச்சை குழந்தைதான்...

நீ  காதலிப்பதாய் சொன்னபோது 
கலங்கித்தான் போனேனம்மா.....
நான் வேண்டாமென்று  









பாசமாய் சொன்னதெல்லாம் வேஷமாய் இருந்தது.....
நான் அழுது அழுது சொன்னதெல்லாம் -உனக்கு
ஆத்திரமாய் இருந்தது.....

இன்று என் அஞ்சு விரல்களுக்குள்
உன் விரல்கள்....இல்லை
நீ நடக்க தெரிந்தும்...
தட்டு தடுமாறி நடக்கிறாய்-ஆனால்
தவறி விழுந்து விட்டாயே.....

நீ விரும்பியே விலகி சென்றுவிட்டாய்
அந்த அர்த்தமில்லாதவனோடு....














நான் விலகி விடாமல் காத்திக்கிறேன் - நீ  வாழ்க்கையின் அர்த்தம் புரியும் வரை....
"என் அன்பு மகளே......!"

No comments:

Post a Comment