என் கவிதைகள்

Friday, December 23, 2016

அயித்த மவ




பத்து வயசுல பார்த்த புள்ள....
பத்து வருஷம் போன பின்ன....
பாட்டி வீட்டுக்கு வந்தவள....
பாத்துக்கோடி உன் மாமனன்னு...
சொந்த பந்தம் சொல்லயில....
தேக்கி வச்ச காதலெல்லாம்....
உன் உருவில் வந்தது போல்
உள் உணர்வு சொல்லியதே....!


வயக்காட்ட சுத்தி காட்ட
அத்த மவ ஆச பட்ட....
வரப்பில் நீயும் நடக்கையிலே
வழுக்கி விழுந்த சேத்துக்குள்ளே...
கை பிடிச்சி தூக்கையிலே....
ஐவிரலும் தீண்டையிலே...
செத்துத்தான் போனோமடி...














துக்க வீட்டில் ஊருசனம்..
அத்தனையும் கூடி அழ...
கூட்டத்துல உன்ன மட்டும்-தேடுதடி,
கண்ணிரண்டும் பார்த்துகிட்டோம்
உள் மனச மாத்திகிட்டோம்....!












சொந்தமெல்லாம் சேர்ந்து நின்னு
சேர்த்துத்தான் வைக்கும்முன்னு
போயிதான் நின்னோம் புள்ள...
ரத்த சொந்தம் சேர்ந்துபுட்டா
புள்ள பொறந்தா ஆவாதுன்னு..
சேரத்தான் வேணாமுன்னு
மல்லுக்கு நின்னாங்களே....














புள்ள குட்டி வேணாம் புள்ள...
எம்புள்ளயா நீயாக....
உம்புள்ளயா நானாக...
மொத்த வாழ்வையும் வாழ்வோம் என்றேனடி...!

காதலெல்லாம் பொய்யின்னு சொல்லி
காணமல் போனவளே....
கல்யாணம் ஆனபின்னே
கனவனோடு வந்தவளே....


வரப்பு வெளியும்
துக்க வீடும் இப்போதான்
தொண்டைய அடைக்குதடி....!!
கண்ணீரில் கரையுதுடி..!




No comments:

Post a Comment