என் கவிதைகள்

Thursday, December 29, 2016

அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு ...

அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு
அவள்தான் அழகி என்றார்கள் 
அவளோடு பேசிவிட துடித்தார்கள் 
விரல் நுனி பட்டுவிடாதா என ஏங்கினார்கள் - ஆனால் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு ... 


அதிகம் பேசமாட்டாள் என்றார்கள் 
அதுவும் அவளுக்கு அழகுதான் என்றார்கள் 
சின்ன சிரிப்புதான் 
அவளின் அத்தனைக்குமான பதில் என்றார்கள் 
சுருள் கூந்தலும் கன்னத்தில் சின்ன பருவும் காணமல் 
செத்துபோய்  இருப்பேனோ என்று -சிலாகித்தார்கள், 
அவளை எப்படியாவது பார்த்து விடு
என்றார்கள்  -ஆனால் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....

கல்நெஞ்சிலும் காதல் வரும் 
கண்மூடாமலே கனவுகள் வரும் 
காகிதம்  இல்லாமலே  கவிதை  வரும் 
கன நேரமும் கடந்து போகாது 
அவளின்  நினைவின்றி  என்றார்கள் -ஆனால் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....


பார்த்த நொடியில் பரிதவித்து போவதைவிட 
பார்க்காத நொடிகள் பாரமாய்  இருக்க  வேண்டும்.... 
கண்களால் பார்த்திட  வேண்டும் 
உள்ளத்தால் உருகிட வேண்டும் 
அவளின் அத்தனை அழகும் ஒன்றாய் 
கொன்றாலும் அதனால் வந்துவிடுமா -காதல் 
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....

No comments:

Post a Comment