அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு
அவள்தான் அழகி என்றார்கள்
அவளோடு பேசிவிட துடித்தார்கள்
விரல் நுனி பட்டுவிடாதா என ஏங்கினார்கள் - ஆனால்
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு ...
அதிகம் பேசமாட்டாள் என்றார்கள்
அதுவும் அவளுக்கு அழகுதான் என்றார்கள்
சின்ன சிரிப்புதான்
அவளின் அத்தனைக்குமான பதில் என்றார்கள்
சுருள் கூந்தலும் கன்னத்தில் சின்ன பருவும் காணமல்
செத்துபோய் இருப்பேனோ என்று -சிலாகித்தார்கள்,
அவளை எப்படியாவது பார்த்து விடு
என்றார்கள் -ஆனால்
என்றார்கள் -ஆனால்
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....
கல்நெஞ்சிலும் காதல் வரும்
கண்மூடாமலே கனவுகள் வரும்
காகிதம் இல்லாமலே கவிதை வரும்
கன நேரமும் கடந்து போகாது
அவளின் நினைவின்றி என்றார்கள் -ஆனால்
அப்படி எதுவும் தோன்றிடவில்லை எனக்கு....
பார்த்த நொடியில் பரிதவித்து போவதைவிட
பார்க்காத நொடிகள் பாரமாய் இருக்க வேண்டும்....
கண்களால் பார்த்திட வேண்டும்
உள்ளத்தால் உருகிட வேண்டும்
அவளின் அத்தனை அழகும் ஒன்றாய்
கொன்றாலும் அதனால் வந்துவிடுமா -காதல்
No comments:
Post a Comment