என் கவிதைகள்

Tuesday, April 18, 2017

வந்து விடு

அன்பே....!!
இத்தனை  நாட்களாக 
வெற்று நீரோடயில்தான் 
நீந்திக்கொண்டு இருந்தேன் - என்று
தெரியவில்லை... 
வெள்ளமென வந்த- உன்
 காதலில் வேரோடு வீழ்ந்திடும் வரை...! 

அன்பே 
இத்தனை நாட்களாக 
வெறும் சாரல் மழையில்தான்
நனைந்திருந்தேன் - என்று  
தெரியவில்லை -உன் 
பாச பனி மழையில் நனைந்திடும் வரை...! 

அன்பே...! 
இதயம் இத்தனை வலிகளை 
தாங்கிடாது என்று  தெரியவில்லை - நீ
என்னை விட்டு விலகி
வெகு தூரம்  போகும்வரை....!

இதம் தந்த நீயேதானடி
வலியும் தந்தாய் - உயிரே....!
வலி தந்த  நீயே வந்து  இதம்
தந்துவிடு - என்
இதயம்  காத்திருக்கு
வந்துவிடு.....!





  




Thursday, April 6, 2017

சிறை  கொண்ட
பறவைக்குத்தான்  தெரியும் 
சிறகடிக்கும் சுதந்திரத்தின்  தாகம்..!
பற்றட்ற மனிதர்களுக்கு 
மத்தியில் பற்றாய் 
வாழும் வாழ்வை  போல...!

Tuesday, April 4, 2017

நீ 
விலகி சென்றால்  
நான் மேலும் 
விலகி செல்வேன் 
நெருங்க மாட்டேன் 
நீ 
நெருங்கி வந்தால் 
நான் மேலும் 
நெருங்கி  வருவேன் 
விலக மாட்டேன் 
நான் 
விலகுவதும் 
நெருங்குவதும் 
உன் வார்த்தயிலே....!
 

Monday, April 3, 2017

கலவி
கனவுகளால்
கலைந்த துயிலில்
பின்னி கிடந்த
கால்கள்
என்னருகே -உனை
காணமல் தேடுதடி .....!


கிறுக்கி கிறுக்கி - என்
கிறுக்கல்கள் அழகான
கையெழுத்தானது...! - என்
கையெழுத்து ஒரு
அழகான கவிதையானது
உன்னாலே...!

Saturday, April 1, 2017

பொய்யன் என்றார்கள்
புலம்புகிறேன் என்றார்கள்
வெற்றிடமாய் இருந்த
என் இதயத்தில்
நீ வேலி போட்டு
உட்காந்த பின்
எனக்குள் உண்டான
மாற்றங்களை கண்டு....
பட்டுவிட்டதாய்  விட்டுவிட்ட,
பூஞ்செடியில் மொட்டுவிட்ட 
தளிராய் வந்தவளே...! - உனை 
எட்ட  நின்று பார்த்தே - தினம் 
ஏங்கி தவித்த நாழிகைகள் 
நினைவில்லையே...! - நீ 
கிட்ட வந்து பேசுவதும்  
கனவில்லையே...?
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருந்தும் தொட்டுவிட
மனமில்லையே...!
என் பட்டு பூவே....!