என் கவிதைகள்

Saturday, April 1, 2017

பட்டுவிட்டதாய்  விட்டுவிட்ட,
பூஞ்செடியில் மொட்டுவிட்ட 
தளிராய் வந்தவளே...! - உனை 
எட்ட  நின்று பார்த்தே - தினம் 
ஏங்கி தவித்த நாழிகைகள் 
நினைவில்லையே...! - நீ 
கிட்ட வந்து பேசுவதும்  
கனவில்லையே...?
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருந்தும் தொட்டுவிட
மனமில்லையே...!
என் பட்டு பூவே....!


  

No comments:

Post a Comment