பட்டுவிட்டதாய் விட்டுவிட்ட,
பூஞ்செடியில் மொட்டுவிட்ட
தளிராய் வந்தவளே...! - உனை
எட்ட நின்று பார்த்தே - தினம்
ஏங்கி தவித்த நாழிகைகள்
நினைவில்லையே...! - நீ
கிட்ட வந்து பேசுவதும்
கனவில்லையே...?
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருந்தும் தொட்டுவிட
மனமில்லையே...!
என் பட்டு பூவே....!
No comments:
Post a Comment