என் கவிதைகள்

Tuesday, April 18, 2017

வந்து விடு

அன்பே....!!
இத்தனை  நாட்களாக 
வெற்று நீரோடயில்தான் 
நீந்திக்கொண்டு இருந்தேன் - என்று
தெரியவில்லை... 
வெள்ளமென வந்த- உன்
 காதலில் வேரோடு வீழ்ந்திடும் வரை...! 

அன்பே 
இத்தனை நாட்களாக 
வெறும் சாரல் மழையில்தான்
நனைந்திருந்தேன் - என்று  
தெரியவில்லை -உன் 
பாச பனி மழையில் நனைந்திடும் வரை...! 

அன்பே...! 
இதயம் இத்தனை வலிகளை 
தாங்கிடாது என்று  தெரியவில்லை - நீ
என்னை விட்டு விலகி
வெகு தூரம்  போகும்வரை....!

இதம் தந்த நீயேதானடி
வலியும் தந்தாய் - உயிரே....!
வலி தந்த  நீயே வந்து  இதம்
தந்துவிடு - என்
இதயம்  காத்திருக்கு
வந்துவிடு.....!





  




No comments:

Post a Comment