என் கவிதைகள்

Monday, February 27, 2017

அவள்
அடிக்கடி
கேட்க்கிறாள் - என்னிடம்
என்னை உனக்கு
எவ்வளவு  பிடிக்கும் என்று - ஆனால்
அவளுக்கு  தெரியாது
அதை  சொல்ல  தெரியாமல்
தவிக்கிறேன் என்று....!
ஏனென்றால்
உன் மீதான
என் காதலை
சொல்லும் அளவிற்கு
மொழிகளில் வார்த்தைகள்
இன்னும் வளம் பெறவில்லை...!



Monday, February 13, 2017

அப்படி 
என்னதான் 
செய்துவிட்டார் - அந்த 
ஆலமரத்தடி பிள்ளையார்....?
அடிக்கடி அவருக்கு 
அருகம்புல் மாலை 
போடுகிறாய்....! 
அவரைவிட உம்மை 
அதிகமாய் நினைப்பது 
நான்தான் என்பதை 
அறியாமலே.....! 
அவனவன்
அடுத்த CM யாரென்பதில்
அடித்துக்கொள்கிறார்கள்...!
அன்பே அப்படி
எதுவும் இல்லை  எனக்கு
உள்ளத்தில் உன்னை
தவிர  யாருக்கும்
இடமில்லை...!

இடறி  விழுந்தேன்
கல் என்று நினைத்தேன்
பிறகுதான் தெரிந்தது - அது
உன்  காதலென்று....!


அன்பே
தேரடி வீதியில்
வளம்  வராதே என்றால்
கேட்கிறாயா..??
இப்போது  பார்
வடம் பிடிக்காமலே
ஒரு தங்க  தேர்
பவனி வருவதாய்
சொல்கிறார்கள்...!




Sunday, February 12, 2017

ஏ...!  
வண்ணத்து   பூச்சியே
இது என்ன புது பழக்கம் -நீ 
எப்போதும் பூக்களைதானே  
மொய்ப்பாய்...! 
இப்போது என்ன- என் 
மார்பில் சிறகடிக்கிறாய் ....? 
அழகான அவள் 
அங்கே இருக்கும் 
ரகசியத்தை 
அறிந்துக்கொண்டாயோ...?

அன்பே 
உனக்கும் எனக்கும் ஓர் நாள்  ...! 
பரிசுகள் பரிமாறிக்கொள்ள வேண்டும்...! 
பூக்கள் சூட்டிட வேண்டும்..!   
நாளெல்லாம் காதலில் திளைத்திட  வேண்டும்...!  
பொழுதெல்லாம் ஒன்றாய் கழித்திட வேண்டும்...!   
கன்னத்தோடு கன்னம் சேர்ந்திட  வேண்டும்..! 
முத்தத்தில் மூழ்கிட  வேண்டும்...! - என்றார்கள் 
காதலர்தினமாம்....! - காதலர்களுக்கான  தினமாம்...!    
உனக்கும் எனக்கும் ஓர் நாள்தானா...? 
ஒவ்வொரு  நாளும்தான் என்பதை அறியாதோர்...!  

Friday, February 10, 2017

மேக கூட்டமில்லை - என் காதல்
காற்றடித்தால் கலைந்து போவதற்கு
மாறாய் கடும் பாறையுமில்லை
அடை மழை பொழிந்தாலும் - கரையாமல்
கல்லாய் நிர்ப்பதர்க்கு ...!
காற்றடித்தாலும்..!
மழை பொழிந்தாலும்
தேனீயாய் -உனை
வந்து சேரும்  மகரந்த துகள்
என்பேன்  பூவே எனை...!
கரைந்து போவாய் என்று தெரிந்தும்...!
மனதுக்குள்ளேயே கட்டிய மணல்  வீடு - நீ
காலம் எனும் கடலலையில்
கரைந்தே போனாலும்
நீயும் நானும்
பழகிய நிஜத்தின் நிமிடங்கள்
மிச்சம் இருக்கும் - உள்ளத்தில்
கரைந்து விடாமலே...!
உனக்கு பிடிக்காத எதையும்
உன்னிடம் திணிக்கமாட்டேன் - அது
நானாக  இருந்தாலும்...!

நீ
தந்துவிட்ட போதும்
போதாமல் மீண்டும் கேட்பேன் - அது
நீயாக இருந்தாலும்...!

நீ
வேண்டாம் என்று
சொன்னாலும் விலகி
போவேனே தவிர
மறந்து போக  மாட்டேன்....!
உயிரே....!