என் கவிதைகள்

Sunday, February 12, 2017

அன்பே 
உனக்கும் எனக்கும் ஓர் நாள்  ...! 
பரிசுகள் பரிமாறிக்கொள்ள வேண்டும்...! 
பூக்கள் சூட்டிட வேண்டும்..!   
நாளெல்லாம் காதலில் திளைத்திட  வேண்டும்...!  
பொழுதெல்லாம் ஒன்றாய் கழித்திட வேண்டும்...!   
கன்னத்தோடு கன்னம் சேர்ந்திட  வேண்டும்..! 
முத்தத்தில் மூழ்கிட  வேண்டும்...! - என்றார்கள் 
காதலர்தினமாம்....! - காதலர்களுக்கான  தினமாம்...!    
உனக்கும் எனக்கும் ஓர் நாள்தானா...? 
ஒவ்வொரு  நாளும்தான் என்பதை அறியாதோர்...!  

No comments:

Post a Comment