என் கவிதைகள்

Wednesday, June 23, 2010

உன்னை பார்த்த பின்....

நான் ஒன்றும்
கவிஞன் இல்லை
ஏனோ...
உன்னை
பார்த்த பின்புதான்
இப்படியாகிவிட்டேன்.....

காதலில் விழுந்தேன்.....

ஆத்தங் கரையில்
சேத்து பகுதியில்
சறுக்கி விழுந்தாய்....

ஏனோ....
நனையமலே
நனைந்து போனேன்.....

உன்
கை விரல் பற்றி
தூக்கி விட நினைத்தேன்....

நானாய்...
கரம் கொடுப்பேன்....
என்று நீயும்........

நீயே கரம்
கொடுப்பாய் என்று
நானும்....

மௌனமானோம்....
இருவரும்...

நானாய்...வந்து
தானாய் கை
கொடுத்தேன்......

நீ
கரையேறி விட்டாய்....
ஆனால்-நான்
வழுக்கி விழுந்து விட்டேன்.....

உன்
ஈர விரல்கள்
தொட்ட நொடியில்....
காதலில்......

Monday, June 21, 2010

மூச்சு காற்று.......

அன்பே உன்னை
என்.....
சுவாச மூச்சாக...
நினைக்கிறேன்.......

சின்ன சின்ன
சுதந்திரம்
தருகிறேன்.....
மகிழ்ச்சியோடு....

நீ....
வெளியே செல்கிறாய் ...
மீண்டும் எனக்குள்....
உலா வருகிறாய்....
உயிர் தருகிறாய்....

நீ
உடலோடு
உறவாடவில்லை
என் உயிரோடு
உறவாடுகிறாய்....

என்
உயிர் பிரிவதை
என்றுமே விரும்பவில்லை...

அது
அடங்கி போக வேணும்
உன்
மூச்சு காற்றோடு......
உயிரோடு உயிராக...

Sunday, June 6, 2010

பரிசு

உன் பிரிவு....


நீ
உன் வீட்டிலும்
நான்
என் வீட்டிலும்
உறங்கினாலும்......
நம் கனவுகள்
மட்டும்
ஒன்றாகத்தான்
விழித்திருக்கிறது
அருகருகே.....

என்
கண்கள் சுவராக்கி
இமைகள் தூரிகையாகி
நினைவுகள் கொண்டு
தீட்டிய - கனவு
ஓவியம் நீ....

கண்களில்
குடியிருப்பதால்
கண்ணீர் விடுவதில்லை
கரைந்து விடுவாயோ
என்று.....


வெப்பம்
படாமலே - உருகி
போனது -என்
இதயம் -உன்
பிரிவின்போது....
மட்டும்.....

Saturday, June 5, 2010


சம்மதம்.....


உன்னிடம்
காதலிப்பதாய்
சொன்னேன்.............

அந்த ஒற்றை
வார்த்தைகளுக்காக
காத்திருந்தவள் போல.....
தாமதிக்காமல்
சந்தோசமாய்
சம்மதம்
சொன்னாய்.....

நீ
இன்னும்
இரண்டு நிமிடங்கள்
தாமதித்து
இருந்தால்.....
தாமதிக்காமல்
நின்றிருக்கும் -என்
இதயம்..........

வேண்டுதல்.......


ஒரே சாலையில்
ஓராயிரம் முறை
ஒருவரை ஒருவர்
கடந்து சென்றிருப்போம்......

ஒருமுறை கூட
தெரியவில்லை.......
நான்
உன்னோடுதான்
வாழபோகிறேன் என்று......

கனவு
காண்பதற்கும்
கவிதை எழுதுவதற்கும்

ஒரு
முகத்தின்
முகவரிக்காக
கடவுளை வேண்டியிருக்கிறேன்.....

என்
வேண்டுதல்
நிறைவேற்றபட்டிருக்கிறது
எனக்கு
தெரியாமலே.......

உன் விழி.....


நீ ஒன்றும்
செய்திட வேண்டாம் - உன்
மின்னல் விழியால்
ஒரு கனம்
பார்த்தாலே போதும்.....

பித்தனும்
சித்தனும் கூட
சொக்கிடுவான்.....
அடியேன் -நான்
மட்டும் என்ன
விதிவிளக்கா ???? -ஆனால்

நான்
பித்தனும் இல்லை
சித்தனும் இல்லை
அதற்கும் மேலானவன்....

உவமை



உலகில்
யாருமே
சொல்லாத
உவமையை கொண்டு
ஒரு
கவிதை எழுதிட
நினைத்தேன்.....

உன்
பெயரை தவிர
வேறு ஒன்றும்
தோனவில்லை........

ஊரறிந்த ரகசியம்.....


தினமும்
நூறு கண்கலாவது
பார்த்திருக்கும்........

உனக்கும்
எனக்கும்
உறவு என்று....
ஆயிரம் உதடுகலாவது
பேசியிருக்கும்......

நம்
கண்கள் கள்ளதனம்மாய்
ஸ்பரிசிக்கும் -அந்த
ரகசியம்
"ஊரறிந்த
நம் காதல்......"

உணர்ந்தேன்.....


காத்திருந்தேன் -கண்ணே
கரு விழி பூத்திருக்க.....

நீ
வளர் பிறையாய் வருவாய்
என்றிருந்தேன்.......
உன்
புருவ வளைவுகளில் - அதை
உணர்ந்தேன்......

அந்திமாலை
சூரியனாய் வருவாய்
என்றிருந்தேன்......
உன்
கண்களின்
வெளிச்சத்தில் - அதை
உணர்ந்தேன்.....

நடு நிசி
நட்சத்திரமாய் வருவாய்
என்றிருந்தேன்
உன்
ஒற்றை கல் மூக்குதித்யில்
உணர்ந்தேன்.....

வெண் மேகமாய்
வருவாய் என்றிருந்தேன்
உன் கன்னங்களில் -அதை
உணர்ந்தேன்

மென்தென்றலாய்
வருவாய்
என்றிருந்தேன்
உன்
முதல் சுவாசத்தில்
உணர்ந்தேன்......

கரு மேகம் சூழ்ந்த
வான வெளியாய்-இருந்த
வாழ்வில்
வான வில்லாய் வந்து
வண்ணமாக்கினாய்......


- அலாஸ்

Friday, June 4, 2010

முதல் காதல்.....


தேடாத பொருள்
தானாய்
கிடைக்கும்போது
அதன்...
அருமை
தெரிவதில்லை-நம்
முதல்
காதல் போல.......

நாணம்


நாணம்
பெண்மையின்
அடையாளம்தான் -அதற்காக
தொலை பேசியில்
துரு துறுவென பேசியவள்....

தனிமையில்
பேசிட துடிக்கும்போது-நீ
தலை குனிந்து
தரை பார்க்கிறாய்......

அன்பே....
தலையை கொஞ்சம்
நிமிர்திக் கொள்....

உன்....
கண்களும்
என்.....
கண்களும்
பார்த்து கொள்ளட்டும் ....

பாவம்
நம்மைவிட
அவைகள்தான்
தவிக்கின்றன.....

கனவு என்னும் வாள்
முனையால்........

உலகின் தலை சிறந்த காதல்......

நீயும்.....
நானும்.....காதலிப்பதாய்....- அந்த
மந்திர வார்த்தையை
பரிமாறிக்கொள்ளவில்லை....
உணர்ந்து கொண்டோம்....


காற்று வெளியில்
காலார....
நடக்கலாம்என்றாய்-ஆனால்
மிதந்தோம்.....

உன்
கை விரல்களை
பற்றி நடக்க நினைத்தேன்
நீயோ - என்
தோல்தனில்
தலைசாய்ந்து கொண்டாய்.....

உன்
கன்னங்கள் உரசி
முத்தமிட நினைத்தேன்...

நீயோ
நம் காதலுக்கு
எல்லையுண்டு
கண்ணியம்
உண்டு என்றாய்....

நான் உன்னை
நினைத்து
பெருமை
கொண்டேன்.....

உலகில
தலை சிறந்த
காதல் நம்முடையதுதான்
என்று நினைத்தேன்.......

நீ
உன் திருமண
அழைப்பிதழை
நீட்டும் வரை.....




-அலாஸ்

Thursday, June 3, 2010

முதல் அத்தியாயம்.....


உன் விருப்பம்.....
என் விருப்பம்......
எதையுமே அறிந்து கொள்ளாமல்
நம் - கண்கள்
பரிமாறி கொண்டன
காதலின் முதல்
அத்தியாயத்தை.....

நம் இதயத்தில்
மின்னலாய்....
ஒட்டிகொண்ட
நம் முகங்கள்.....

நீயும் நானும்
மறுமுறை
காணும் வரை.....
காத்திருக்கும்,
கண்களின் முதல் அத்தியாத்தின்
நினைவோடு.......


- அலாஸ்........