என் கவிதைகள்

Sunday, June 6, 2010

உன் பிரிவு....


நீ
உன் வீட்டிலும்
நான்
என் வீட்டிலும்
உறங்கினாலும்......
நம் கனவுகள்
மட்டும்
ஒன்றாகத்தான்
விழித்திருக்கிறது
அருகருகே.....

என்
கண்கள் சுவராக்கி
இமைகள் தூரிகையாகி
நினைவுகள் கொண்டு
தீட்டிய - கனவு
ஓவியம் நீ....

கண்களில்
குடியிருப்பதால்
கண்ணீர் விடுவதில்லை
கரைந்து விடுவாயோ
என்று.....


வெப்பம்
படாமலே - உருகி
போனது -என்
இதயம் -உன்
பிரிவின்போது....
மட்டும்.....

No comments:

Post a Comment