.jpg)
காத்திருந்தேன் -கண்ணே
கரு விழி பூத்திருக்க.....
நீ
வளர் பிறையாய் வருவாய்
என்றிருந்தேன்.......
உன்
புருவ வளைவுகளில் - அதை
உணர்ந்தேன்......
அந்திமாலை
சூரியனாய் வருவாய்
என்றிருந்தேன்......
உன்
கண்களின்
வெளிச்சத்தில் - அதை
உணர்ந்தேன்.....
நடு நிசி
நட்சத்திரமாய் வருவாய்
என்றிருந்தேன்
உன்
ஒற்றை கல் மூக்குதித்யில்
உணர்ந்தேன்.....
வெண் மேகமாய்
வருவாய் என்றிருந்தேன்
உன் கன்னங்களில் -அதை
உணர்ந்தேன்
மென்தென்றலாய்
வருவாய்
என்றிருந்தேன்
உன்
முதல் சுவாசத்தில்
உணர்ந்தேன்......
கரு மேகம் சூழ்ந்த
வான வெளியாய்-இருந்த
வாழ்வில்
வான வில்லாய் வந்து
வண்ணமாக்கினாய்......
- அலாஸ்
No comments:
Post a Comment