என் கவிதைகள்

Thursday, June 3, 2010

முதல் அத்தியாயம்.....


உன் விருப்பம்.....
என் விருப்பம்......
எதையுமே அறிந்து கொள்ளாமல்
நம் - கண்கள்
பரிமாறி கொண்டன
காதலின் முதல்
அத்தியாயத்தை.....

நம் இதயத்தில்
மின்னலாய்....
ஒட்டிகொண்ட
நம் முகங்கள்.....

நீயும் நானும்
மறுமுறை
காணும் வரை.....
காத்திருக்கும்,
கண்களின் முதல் அத்தியாத்தின்
நினைவோடு.......


- அலாஸ்........

No comments:

Post a Comment