என் கவிதைகள்

Friday, July 28, 2017

ஒரு தலை காதல்...!

உன் கருங்கூந்தலின் 
ஈரம் காய்ந்திடவே - தினம் 
வருவதாய் நினைக்கும் 
சூரியன் போல் -நீ 
சிரித்து பேசியதெல்லாம் 
காதலாக கனா கண்ட 
மனதிடம் எப்படி சொல்வேன் -அன்பே 
எல்லாமே பொய் என்று...!  






மூழ்கிய நேரம்...?

உன்
காது மடலில் சொல்ல வந்தேன்
சுவாச காற்றாலே -ஒரு
காதல் கவிதை...!
சற்றும் எதிர்பாரவில்லை
சறுக்கி விழுவேன் என்று -உன்
மென் கழுத்திலே...!
முத்தத்தில் மூழ்கியே
போனோம்  எழுந்த நேரம்
அறியாமலே...!




முக்தி

அன்பே அப்படியே நில்...!
விலகிட வேண்டாம்...!
மன அமைதிக்கு
இதுவும் ஒரு -தியான
நிலைதான் என தெரியாமலே,
முக்த்தியை தேடும்
முட்டாள் முனிவர்கள்....!





இன்று மட்டும்

என்னவள் இதமாய் தூங்குகிறாள்
என்- நெஞ்சிலே  இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!
விடிந்து விட்டு போகட்டும்
ஏ  கொண்டை சேவலே
கொக்கரிக்காதே....!
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
விடி வெள்ளியே  விடிய விட வேண்டாம்
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
சூரியனுக்கும் சொல்லி அனுப்புங்கள்
உதயமாகிவிட போகிறது....!
விடுமுறை எடுத்துக்கொள்ளட்டும்   -இன்று மட்டும்...!

என்னவள் இதமாய் தூங்குகிறாள்
என்- நெஞ்சிலே  இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!











பறவையானேன்...!

நெடுந்தூர பயணமடி..!
தூக்கம் உன் கண்களை தழுவ...!
ஏக்கம் நெஞ்சினை கவ்வ - நீயோ
கண்ணயர்ந்து தோள்சாய்ந்த போதுதான்
தெரிந்தது -நானும்...!
சிறகின்றி  பறப்பேன் என்று...!



             


உன் மனசுக்குள்...!

கடைவீதியில் -நான்
பார்க்கும் அழகு பொருள்களில் 
எல்லாம் உனக்கு அணியவைத்து 
அழகு பார்ப்பேன்...!
உன் 
மனசுக்குள் நான் 
இருக்கேனா -என்று 
பார்க்க மறந்து...!



Wednesday, July 26, 2017

இதய கூடு...!

உன்
அழகை இமைக்காமல்
ரசிக்கிற கண்களின் ஊடே
நிரம்பி  வழிகிறாய் - அன்பே
 பிம்பங்களாய் -என்
இதய கூட்டில்...!




வெட்கம்

கூட்டத்து நடுவே
பார்ப்பது நீதான் - என 
உணர்ந்தும்  பார்க்காதது 
போலிருக்கிறேன்...!  
சட்டென்று நானும்-உனை 
தேடிய போது 
பார்வையை விளக்கினாய் 
வெட்கத்தை மறைக்க மறந்து...!




கர்வம்

உன் பின் இடுப்பில்
ஊசல் ஆடுவதால் என்ன ஒரு
கர்வம் – அந்த கருங்கூந்தலுக்கு...



சிம்மாசனம்

உன் இடை எனும் சிம்மாசனத்தில் 
ஒக்காந்து ஒய்யாரமாய்
வளம் வர கானல் காலம்வரை
காத்திருக்கிறது –உன்
வீட்டு பழைய பித்தளை குடம்...!

Tuesday, July 25, 2017

முத்து

முத்தெடுக்க மூச்சு முட்ட தேடுகிறார்கள்
ஆழியில் மூழ்கி –முட்டாள்கள்
உன் பல் வரிசையை பாராமலே...!  

நீ வருவாயா...?

மரத்தடி நிழலில் - நீயும் நானும்
மணிக்கணக்காய் பேசியிருப்போம்
மனம்விட்டு.....!
ஒவ்வொரு நாளும் சொல்வாய்
போக மனமில்லை என்று எனை விட்டு...!
ஏனோ வராமல் போனாயே சில நாளிலே...?
இலையுதிர் காலம் போய்
இலைதுளிர் காலம் வந்தும் -நீ
வருவாயோ - என
காத்திருக்கும் மாறாத
மரமும் நிழலும் நானும் -மற்றும்
நாம்  பேசிய  யாவும் ...!







கலவி கனவுகள்

கை தொடும் தூரத்தில் - நீயும்
தொட முடியா மோகத்தில் -நானும்
உன் அண்மையில் என் ஆண்மையை
அடக்கிவிட துடித்தாலும் -நீ
காதோரம் பேசிய ரகசிய வார்த்தைகளில் -உன்
சூடான சுவாசம் எனை அனலாக்கியதே...!
இரு கைகள் சேர
கால்கள் பின்ன
மார்போடு சேர - நீயும் நானும்
வேரோடு சாய்ந்தே நீரோடு
கரைந்தே  போகும்
காலம் கனியாமலே போனதே  கண்மணி...!





கணம்

நீ
தோளில் சாந்து 
தூங்கிய போது 
தெரியவில்லை - அன்பே 
நீ....!  இவ்வளவு கணம் என்று....! 



உறவாக...

இறக்கும் முளைக்காத
சிறக்கும் முளைக்கத்
சின்னஞ்சிறு பறவையடி - நீ
உனை- என்
உள்ளங்கையில் ஏந்தியே
செல்லம் கொஞ்சிடவே -மனம்
திண்ணம் கொள்ளுதடி -என்
உள்ளமெல்லாம் நீதானே நீதானே..!
உயிரே  உன்னோடு நானிருப்பேன்
உறவாக....! எந்நாளுமே...!






Saturday, July 22, 2017

கைக்குட்டை

நீ
மழையில் நனைந்து
துடைத்த கைகுட்டையில்
முகம் துடைத்த போதுதான்
தெரிந்தது - நானும்
அழகாகிபோனது....!

நினைவில்லை

உன்னோடு
பேசிக் கொண்டிருக்கும் போது
நினைவில்லை - நான்
பேச நினைத்த எதுவும் - நீ
பேசிவிட்டு போன  பின்பு
நினைவில்லை நாம் பேசிய
வார்த்தைகள்  எதுவும்....!


பூட்டு

"கரம்" கொடுத்த நீயே -என்
"சிரம்" கொய்தயடி..!
யாரோ "புறம்" பேச
நீயோ நான்
"வரம்" என நினைத்த காதலை
மறந்து எனை "அகம்" நோக விட்டு
சென்றாயே...!!

உன் "முகம்" கானா பொழுதுகள் -ஒரு
யுகமானதடி  - நீயோ என் அண்மையில் -நானோ
உள்மனம் லயித்திட போதும் இன்று - போவென
சொல்லில் காதலில்  தீ மூட்டாதே
அத்தனை  காதலையும் உனக்குள்ளே  பூட்டாதே...!





உளறல்

நீ
எனை விட்டு
பிரிந்த போதும் -உன்
பெயரை மட்டும்
உலறுகிற உதடுகள் -ஏனோ
ஓயவில்லை -அன்பே
அகலாத -நம்
காதல் நினைவுகள் போல...!