அவள் கண்ணுக்கு நீ அழகாய் தெரிந்ததால் வந்தது அல்ல - காதல் அவள் மனதில் துளிர்த்த நம்ம்பிக்கையால் வந்த காதல் அது எனவே காலமெல்லாம் அவளின் காதலில் கிட
Friday, July 28, 2017
இன்று மட்டும்
என்னவள் இதமாய் தூங்குகிறாள்
என்- நெஞ்சிலே இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!
விடிந்து விட்டு போகட்டும்
ஏ கொண்டை சேவலே
கொக்கரிக்காதே....!
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
விடி வெள்ளியே விடிய விட வேண்டாம்
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
சூரியனுக்கும் சொல்லி அனுப்புங்கள்
உதயமாகிவிட போகிறது....!
விடுமுறை எடுத்துக்கொள்ளட்டும் -இன்று மட்டும்...!
என்னவள் இதமாய் தூங்குகிறாள்
என்- நெஞ்சிலே இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!
என்- நெஞ்சிலே இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!
விடிந்து விட்டு போகட்டும்
ஏ கொண்டை சேவலே
கொக்கரிக்காதே....!
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
விடி வெள்ளியே விடிய விட வேண்டாம்
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
சூரியனுக்கும் சொல்லி அனுப்புங்கள்
உதயமாகிவிட போகிறது....!
விடுமுறை எடுத்துக்கொள்ளட்டும் -இன்று மட்டும்...!
என்னவள் இதமாய் தூங்குகிறாள்
என்- நெஞ்சிலே இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!
Wednesday, July 26, 2017
சிம்மாசனம்
உன் இடை எனும் சிம்மாசனத்தில்
ஒக்காந்து ஒய்யாரமாய்
வளம் வர கானல் காலம்வரை
காத்திருக்கிறது –உன்
வீட்டு பழைய பித்தளை குடம்...!
Tuesday, July 25, 2017
நீ வருவாயா...?
மரத்தடி நிழலில் - நீயும் நானும்
மணிக்கணக்காய் பேசியிருப்போம்
மனம்விட்டு.....!
ஒவ்வொரு நாளும் சொல்வாய்
போக மனமில்லை என்று எனை விட்டு...!
ஏனோ வராமல் போனாயே சில நாளிலே...?
இலையுதிர் காலம் போய்
இலைதுளிர் காலம் வந்தும் -நீ
வருவாயோ - என
காத்திருக்கும் மாறாத
மரமும் நிழலும் நானும் -மற்றும்
நாம் பேசிய யாவும் ...!
மணிக்கணக்காய் பேசியிருப்போம்
மனம்விட்டு.....!
ஒவ்வொரு நாளும் சொல்வாய்
போக மனமில்லை என்று எனை விட்டு...!
ஏனோ வராமல் போனாயே சில நாளிலே...?
இலையுதிர் காலம் போய்
இலைதுளிர் காலம் வந்தும் -நீ
வருவாயோ - என
காத்திருக்கும் மாறாத
மரமும் நிழலும் நானும் -மற்றும்
நாம் பேசிய யாவும் ...!
கலவி கனவுகள்
கை தொடும் தூரத்தில் - நீயும்
தொட முடியா மோகத்தில் -நானும்
உன் அண்மையில் என் ஆண்மையை
அடக்கிவிட துடித்தாலும் -நீ
காதோரம் பேசிய ரகசிய வார்த்தைகளில் -உன்
சூடான சுவாசம் எனை அனலாக்கியதே...!
இரு கைகள் சேர
கால்கள் பின்ன
மார்போடு சேர - நீயும் நானும்
வேரோடு சாய்ந்தே நீரோடு
கரைந்தே போகும்
காலம் கனியாமலே போனதே கண்மணி...!
தொட முடியா மோகத்தில் -நானும்
உன் அண்மையில் என் ஆண்மையை
அடக்கிவிட துடித்தாலும் -நீ
காதோரம் பேசிய ரகசிய வார்த்தைகளில் -உன்
சூடான சுவாசம் எனை அனலாக்கியதே...!
இரு கைகள் சேர
கால்கள் பின்ன
மார்போடு சேர - நீயும் நானும்
வேரோடு சாய்ந்தே நீரோடு
கரைந்தே போகும்
காலம் கனியாமலே போனதே கண்மணி...!
Saturday, July 22, 2017
பூட்டு
"கரம்" கொடுத்த நீயே -என்
"சிரம்" கொய்தயடி..!
யாரோ "புறம்" பேச
நீயோ நான்
"வரம்" என நினைத்த காதலை
மறந்து எனை "அகம்" நோக விட்டு
சென்றாயே...!!
உன் "முகம்" கானா பொழுதுகள் -ஒரு
யுகமானதடி - நீயோ என் அண்மையில் -நானோ
உள்மனம் லயித்திட போதும் இன்று - போவென
சொல்லில் காதலில் தீ மூட்டாதே
அத்தனை காதலையும் உனக்குள்ளே பூட்டாதே...!
"சிரம்" கொய்தயடி..!
யாரோ "புறம்" பேச
நீயோ நான்
"வரம்" என நினைத்த காதலை
மறந்து எனை "அகம்" நோக விட்டு
சென்றாயே...!!
உன் "முகம்" கானா பொழுதுகள் -ஒரு
யுகமானதடி - நீயோ என் அண்மையில் -நானோ
உள்மனம் லயித்திட போதும் இன்று - போவென
சொல்லில் காதலில் தீ மூட்டாதே
அத்தனை காதலையும் உனக்குள்ளே பூட்டாதே...!
Subscribe to:
Posts (Atom)