என் கவிதைகள்

Tuesday, July 25, 2017

நீ வருவாயா...?

மரத்தடி நிழலில் - நீயும் நானும்
மணிக்கணக்காய் பேசியிருப்போம்
மனம்விட்டு.....!
ஒவ்வொரு நாளும் சொல்வாய்
போக மனமில்லை என்று எனை விட்டு...!
ஏனோ வராமல் போனாயே சில நாளிலே...?
இலையுதிர் காலம் போய்
இலைதுளிர் காலம் வந்தும் -நீ
வருவாயோ - என
காத்திருக்கும் மாறாத
மரமும் நிழலும் நானும் -மற்றும்
நாம்  பேசிய  யாவும் ...!







No comments:

Post a Comment