என் கவிதைகள்

Wednesday, October 25, 2017

சிறகை வெட்டி
சொர்க்கத்தில் விட்டாய் -என் 
சொர்க்கம் எதுவென 
தெரியாமலே.....! 

காதலை பறித்து  
இதயத்தை தந்தாய் -
உன் மீதான -  என் 
என் காதலை அறியாமலே....! 

காய்ந்த பின் 
வேரில் நீரூற்றினாய் 
உன் பிரிவில்தான்  
காய்ந்து போனேன் என்று 
தெரியாமல்.

உன்னால் உண்டான 
காதலை உன்னோடு 
சேர்க்காமலே என்னோடே 
புதைந்து போன 
ஒருதலை காதலில்....நான் 
காதலியே....!











Wednesday, August 9, 2017

ஒரு பக்கம் குளிரிலும்
ஒரு பக்கம் கனலிலும் 
ஒரு உடல் தவிக்குது...!  
வியர்க்கவா நடுங்கவா-என 
என் உடல் எனையே  கேக்குது...! 
இது என்ன தெரியல 
ஒண்ணுமே புரியல 
இதுவரை கண்டதில்லை
இப்படி ஒரு  இம்சைகளை

உன் சிரிப்பை பார்த்ததுமே
உள்  மனசுல ஓட்டிகிட்ட
இதயத்த இருக்கமா கட்டிக்கிட்ட
ஒத்த வார்த்த பேசலயே  - ஆனா
பத்து ஜென்மம் பார்த்துகிட்டு
பழகியது  போலவே  இருக்கு..!

கண்விழித்த  நேரத்திலும்
கனவு வந்து கனக்குதடி
உன்னோட நெனப்புலத்தான்
எம் பொழப்ப கெடுக்குதடி

இத்தனை சிரமத்திலும் - என்
இதயம் சிலிர்க்குதடி
இது மட்டுந்தான்  காதலா
இன்னும் கூட இருக்கா
சொல்லிவிடு -காதலியே...!


















Tuesday, August 1, 2017

நின் பாதம் பட்டு துளிர் விட்டது
புற்கள்... !
உன் கேசம் கலைத்து  சென்ற
காற்றில்  வீசியது வாசம்...!
உன் துப்பட்டாவின் ஸ்பரிசத்தில்
பூத்தது  பூக்கள்...!
உன் குரல் கேட்டு குயில்கள் கற்றது
சங்கீதம்...!
உன் விரல் பட்ட பேருந்து சன்னல்
கம்பியில் வீணையின் ஸ்வரங்கள்...!
நீ அமர்ந்து விட்டு சென்ற பூங்காவின்
இருக்கைகள் ஆனது சிம்மாசனம்...!
உன் கண்களை பார்த்து காதலில் விழுந்த
என்னில் மட்டும் என்ன  தவறுகள் இருக்க முடியும்....?????










நீ இல்லாத வாழ்வினிலே.....!

தொலைத்த பின்புதான்
தேடினேன் -நீ
கிடைத்த இடங்களில் எல்லாம்
அருகில் இருந்த போது தெரியவில்லை
அருமை ... இப்போது
அரை நொடி கூட நரகமடி....
நாளை கடப்பதே வேலையாகி போனபின்
காலை  மாலை எதுவென்றே  தெரியவில்லை
நீ இல்லாத  வாழ்வினிலே.....!


Friday, July 28, 2017

ஒரு தலை காதல்...!

உன் கருங்கூந்தலின் 
ஈரம் காய்ந்திடவே - தினம் 
வருவதாய் நினைக்கும் 
சூரியன் போல் -நீ 
சிரித்து பேசியதெல்லாம் 
காதலாக கனா கண்ட 
மனதிடம் எப்படி சொல்வேன் -அன்பே 
எல்லாமே பொய் என்று...!  






மூழ்கிய நேரம்...?

உன்
காது மடலில் சொல்ல வந்தேன்
சுவாச காற்றாலே -ஒரு
காதல் கவிதை...!
சற்றும் எதிர்பாரவில்லை
சறுக்கி விழுவேன் என்று -உன்
மென் கழுத்திலே...!
முத்தத்தில் மூழ்கியே
போனோம்  எழுந்த நேரம்
அறியாமலே...!




முக்தி

அன்பே அப்படியே நில்...!
விலகிட வேண்டாம்...!
மன அமைதிக்கு
இதுவும் ஒரு -தியான
நிலைதான் என தெரியாமலே,
முக்த்தியை தேடும்
முட்டாள் முனிவர்கள்....!





இன்று மட்டும்

என்னவள் இதமாய் தூங்குகிறாள்
என்- நெஞ்சிலே  இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!
விடிந்து விட்டு போகட்டும்
ஏ  கொண்டை சேவலே
கொக்கரிக்காதே....!
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
விடி வெள்ளியே  விடிய விட வேண்டாம்
விடுமுறை எடுத்துக்கொள்-இன்று மட்டும்
சூரியனுக்கும் சொல்லி அனுப்புங்கள்
உதயமாகிவிட போகிறது....!
விடுமுறை எடுத்துக்கொள்ளட்டும்   -இன்று மட்டும்...!

என்னவள் இதமாய் தூங்குகிறாள்
என்- நெஞ்சிலே  இதய துடிப்பின்
மஞ்ச தாலாட்டில்...!











பறவையானேன்...!

நெடுந்தூர பயணமடி..!
தூக்கம் உன் கண்களை தழுவ...!
ஏக்கம் நெஞ்சினை கவ்வ - நீயோ
கண்ணயர்ந்து தோள்சாய்ந்த போதுதான்
தெரிந்தது -நானும்...!
சிறகின்றி  பறப்பேன் என்று...!



             


உன் மனசுக்குள்...!

கடைவீதியில் -நான்
பார்க்கும் அழகு பொருள்களில் 
எல்லாம் உனக்கு அணியவைத்து 
அழகு பார்ப்பேன்...!
உன் 
மனசுக்குள் நான் 
இருக்கேனா -என்று 
பார்க்க மறந்து...!



Wednesday, July 26, 2017

இதய கூடு...!

உன்
அழகை இமைக்காமல்
ரசிக்கிற கண்களின் ஊடே
நிரம்பி  வழிகிறாய் - அன்பே
 பிம்பங்களாய் -என்
இதய கூட்டில்...!




வெட்கம்

கூட்டத்து நடுவே
பார்ப்பது நீதான் - என 
உணர்ந்தும்  பார்க்காதது 
போலிருக்கிறேன்...!  
சட்டென்று நானும்-உனை 
தேடிய போது 
பார்வையை விளக்கினாய் 
வெட்கத்தை மறைக்க மறந்து...!




கர்வம்

உன் பின் இடுப்பில்
ஊசல் ஆடுவதால் என்ன ஒரு
கர்வம் – அந்த கருங்கூந்தலுக்கு...



சிம்மாசனம்

உன் இடை எனும் சிம்மாசனத்தில் 
ஒக்காந்து ஒய்யாரமாய்
வளம் வர கானல் காலம்வரை
காத்திருக்கிறது –உன்
வீட்டு பழைய பித்தளை குடம்...!

Tuesday, July 25, 2017

முத்து

முத்தெடுக்க மூச்சு முட்ட தேடுகிறார்கள்
ஆழியில் மூழ்கி –முட்டாள்கள்
உன் பல் வரிசையை பாராமலே...!  

நீ வருவாயா...?

மரத்தடி நிழலில் - நீயும் நானும்
மணிக்கணக்காய் பேசியிருப்போம்
மனம்விட்டு.....!
ஒவ்வொரு நாளும் சொல்வாய்
போக மனமில்லை என்று எனை விட்டு...!
ஏனோ வராமல் போனாயே சில நாளிலே...?
இலையுதிர் காலம் போய்
இலைதுளிர் காலம் வந்தும் -நீ
வருவாயோ - என
காத்திருக்கும் மாறாத
மரமும் நிழலும் நானும் -மற்றும்
நாம்  பேசிய  யாவும் ...!







கலவி கனவுகள்

கை தொடும் தூரத்தில் - நீயும்
தொட முடியா மோகத்தில் -நானும்
உன் அண்மையில் என் ஆண்மையை
அடக்கிவிட துடித்தாலும் -நீ
காதோரம் பேசிய ரகசிய வார்த்தைகளில் -உன்
சூடான சுவாசம் எனை அனலாக்கியதே...!
இரு கைகள் சேர
கால்கள் பின்ன
மார்போடு சேர - நீயும் நானும்
வேரோடு சாய்ந்தே நீரோடு
கரைந்தே  போகும்
காலம் கனியாமலே போனதே  கண்மணி...!





கணம்

நீ
தோளில் சாந்து 
தூங்கிய போது 
தெரியவில்லை - அன்பே 
நீ....!  இவ்வளவு கணம் என்று....! 



உறவாக...

இறக்கும் முளைக்காத
சிறக்கும் முளைக்கத்
சின்னஞ்சிறு பறவையடி - நீ
உனை- என்
உள்ளங்கையில் ஏந்தியே
செல்லம் கொஞ்சிடவே -மனம்
திண்ணம் கொள்ளுதடி -என்
உள்ளமெல்லாம் நீதானே நீதானே..!
உயிரே  உன்னோடு நானிருப்பேன்
உறவாக....! எந்நாளுமே...!






Saturday, July 22, 2017

கைக்குட்டை

நீ
மழையில் நனைந்து
துடைத்த கைகுட்டையில்
முகம் துடைத்த போதுதான்
தெரிந்தது - நானும்
அழகாகிபோனது....!

நினைவில்லை

உன்னோடு
பேசிக் கொண்டிருக்கும் போது
நினைவில்லை - நான்
பேச நினைத்த எதுவும் - நீ
பேசிவிட்டு போன  பின்பு
நினைவில்லை நாம் பேசிய
வார்த்தைகள்  எதுவும்....!


பூட்டு

"கரம்" கொடுத்த நீயே -என்
"சிரம்" கொய்தயடி..!
யாரோ "புறம்" பேச
நீயோ நான்
"வரம்" என நினைத்த காதலை
மறந்து எனை "அகம்" நோக விட்டு
சென்றாயே...!!

உன் "முகம்" கானா பொழுதுகள் -ஒரு
யுகமானதடி  - நீயோ என் அண்மையில் -நானோ
உள்மனம் லயித்திட போதும் இன்று - போவென
சொல்லில் காதலில்  தீ மூட்டாதே
அத்தனை  காதலையும் உனக்குள்ளே  பூட்டாதே...!





உளறல்

நீ
எனை விட்டு
பிரிந்த போதும் -உன்
பெயரை மட்டும்
உலறுகிற உதடுகள் -ஏனோ
ஓயவில்லை -அன்பே
அகலாத -நம்
காதல் நினைவுகள் போல...!





Thursday, May 4, 2017

நீர்....

மழையே அருள் புரிவாயா..??
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?
வெட்க்கையும் வேர்வையும் 
வெறுப்பாய் இருக்கிறதே...!
என் முப்பாட்டன் தாத்தன் எல்லாம்
கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தில்
நீந்தி குளித்தான்....!
என் அப்பனோ நிரம்பிய
குளத்திலும் கிணத்திலும்
நீந்தி குளித்தான்...!
இன்று நானோ என்
கணுக்கால் நனைய
மூழ்க முடியாமலும்
நீந்த முடியாமலும்
மொண்டு குளிக்கிறேன்...
நாளை என் பிள்ளை குளிப்பனா
என்பதைவிட தாகம் தீர
குடிப்பானா என்றென்னும் போது
ஈரக்குலை நடுங்குதம்மா...!
மழையே அருள் புரிவாயா..??
தாகம் தீராத கானல் பொழுதை
கரும்மேகத்தால் நனைப்பாயா...?

Monday, May 1, 2017

தேடல்

நீ- என்ற உன்னை
நீ இல்லாதவர்களிடம்
எல்லாம் தேடினேன்
சிலரோடு சிரித்தேன்
சிலரோடு பழகினேன்
சிலர் மீது  பாசம்  வைத்தேன்
சிலரோடு சண்டையிட்டேன்
சில நாள்  கழித்துதான் தெரிந்தது
அங்கெல்லாம் நீ இல்லை என்று
எங்கெல்லாம் நீ இருப்பாய்  என்று
நினைத்தேனோ அங்கெல்லாம்
நீ இல்லை....!
நீ இருந்த இடத்திலேயெல்லாம்
 நானும்  தேடிட வில்லை...!

என்னருகே நீ இருந்த போதிலும்
இருவருக்குமே தெரியவில்லை
இந்த இரு  இதயமும்தான்
இடம் மாற போகுது என்று...
நீயும் சொல்லவில்லை
நானும் தேடவில்லை....
உணர்ந்து கொண்டோம் - இதுதான்
காதலென்று....!







Tuesday, April 18, 2017

வந்து விடு

அன்பே....!!
இத்தனை  நாட்களாக 
வெற்று நீரோடயில்தான் 
நீந்திக்கொண்டு இருந்தேன் - என்று
தெரியவில்லை... 
வெள்ளமென வந்த- உன்
 காதலில் வேரோடு வீழ்ந்திடும் வரை...! 

அன்பே 
இத்தனை நாட்களாக 
வெறும் சாரல் மழையில்தான்
நனைந்திருந்தேன் - என்று  
தெரியவில்லை -உன் 
பாச பனி மழையில் நனைந்திடும் வரை...! 

அன்பே...! 
இதயம் இத்தனை வலிகளை 
தாங்கிடாது என்று  தெரியவில்லை - நீ
என்னை விட்டு விலகி
வெகு தூரம்  போகும்வரை....!

இதம் தந்த நீயேதானடி
வலியும் தந்தாய் - உயிரே....!
வலி தந்த  நீயே வந்து  இதம்
தந்துவிடு - என்
இதயம்  காத்திருக்கு
வந்துவிடு.....!





  




Thursday, April 6, 2017

சிறை  கொண்ட
பறவைக்குத்தான்  தெரியும் 
சிறகடிக்கும் சுதந்திரத்தின்  தாகம்..!
பற்றட்ற மனிதர்களுக்கு 
மத்தியில் பற்றாய் 
வாழும் வாழ்வை  போல...!

Tuesday, April 4, 2017

நீ 
விலகி சென்றால்  
நான் மேலும் 
விலகி செல்வேன் 
நெருங்க மாட்டேன் 
நீ 
நெருங்கி வந்தால் 
நான் மேலும் 
நெருங்கி  வருவேன் 
விலக மாட்டேன் 
நான் 
விலகுவதும் 
நெருங்குவதும் 
உன் வார்த்தயிலே....!
 

Monday, April 3, 2017

கலவி
கனவுகளால்
கலைந்த துயிலில்
பின்னி கிடந்த
கால்கள்
என்னருகே -உனை
காணமல் தேடுதடி .....!


கிறுக்கி கிறுக்கி - என்
கிறுக்கல்கள் அழகான
கையெழுத்தானது...! - என்
கையெழுத்து ஒரு
அழகான கவிதையானது
உன்னாலே...!

Saturday, April 1, 2017

பொய்யன் என்றார்கள்
புலம்புகிறேன் என்றார்கள்
வெற்றிடமாய் இருந்த
என் இதயத்தில்
நீ வேலி போட்டு
உட்காந்த பின்
எனக்குள் உண்டான
மாற்றங்களை கண்டு....
பட்டுவிட்டதாய்  விட்டுவிட்ட,
பூஞ்செடியில் மொட்டுவிட்ட 
தளிராய் வந்தவளே...! - உனை 
எட்ட  நின்று பார்த்தே - தினம் 
ஏங்கி தவித்த நாழிகைகள் 
நினைவில்லையே...! - நீ 
கிட்ட வந்து பேசுவதும்  
கனவில்லையே...?
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருந்தும் தொட்டுவிட
மனமில்லையே...!
என் பட்டு பூவே....!


  

Wednesday, March 29, 2017

அவள்
வீட்டை
கடக்கும்போதெல்லாம்...!
அன்னிச்சை செயலாய்
அண்ணாந்து பார்க்கிறேன்..!
அவள்  குடி  பெயர்ந்த  பின்னும்
அந்த பால்கனியை.....!
  

Sunday, March 26, 2017

களவு கொடுத்த நானும் 
பிராது கொடுக்கவில்லை 
களவாடிய  நீயும் 
கைது  செய்ய  படவில்லை 
காரணம் காதல்....! 



படைத்தவன்
பாரபட்சம் இன்றி 
வரைந்து  அனுப்பிவிட்டான் - உன் 
கண்களை - நீ 
மேலும் மை தீட்டி - என்னை 
கொல்லாதே...!

Tuesday, March 21, 2017

ஏவாள் மீதான
ஆதாமின் காதலை
ஆப்பிள் கனிக்குள்
வைத்தான்  கடவுள்...!
என் காதலை
உனக்குள் வைத்தது போல்...!


Saturday, March 18, 2017

பறக்க தெரிந்த
பறவை என்று தெரிந்தும்...!
பறந்து  செல்லாமல்
சிறைபட்டிருக்கிறேன்- உன்
இதய கூட்டில்...!

நான் ஒன்றும் 
கவிஞன் இல்லை - ஏனோ 
உனை பார்த்த பின்புதான் 
இப்படி ஆகிவிட்டேன்....! 

Monday, February 27, 2017

அவள்
அடிக்கடி
கேட்க்கிறாள் - என்னிடம்
என்னை உனக்கு
எவ்வளவு  பிடிக்கும் என்று - ஆனால்
அவளுக்கு  தெரியாது
அதை  சொல்ல  தெரியாமல்
தவிக்கிறேன் என்று....!
ஏனென்றால்
உன் மீதான
என் காதலை
சொல்லும் அளவிற்கு
மொழிகளில் வார்த்தைகள்
இன்னும் வளம் பெறவில்லை...!



Monday, February 13, 2017

அப்படி 
என்னதான் 
செய்துவிட்டார் - அந்த 
ஆலமரத்தடி பிள்ளையார்....?
அடிக்கடி அவருக்கு 
அருகம்புல் மாலை 
போடுகிறாய்....! 
அவரைவிட உம்மை 
அதிகமாய் நினைப்பது 
நான்தான் என்பதை 
அறியாமலே.....! 
அவனவன்
அடுத்த CM யாரென்பதில்
அடித்துக்கொள்கிறார்கள்...!
அன்பே அப்படி
எதுவும் இல்லை  எனக்கு
உள்ளத்தில் உன்னை
தவிர  யாருக்கும்
இடமில்லை...!

இடறி  விழுந்தேன்
கல் என்று நினைத்தேன்
பிறகுதான் தெரிந்தது - அது
உன்  காதலென்று....!


அன்பே
தேரடி வீதியில்
வளம்  வராதே என்றால்
கேட்கிறாயா..??
இப்போது  பார்
வடம் பிடிக்காமலே
ஒரு தங்க  தேர்
பவனி வருவதாய்
சொல்கிறார்கள்...!




Sunday, February 12, 2017

ஏ...!  
வண்ணத்து   பூச்சியே
இது என்ன புது பழக்கம் -நீ 
எப்போதும் பூக்களைதானே  
மொய்ப்பாய்...! 
இப்போது என்ன- என் 
மார்பில் சிறகடிக்கிறாய் ....? 
அழகான அவள் 
அங்கே இருக்கும் 
ரகசியத்தை 
அறிந்துக்கொண்டாயோ...?

அன்பே 
உனக்கும் எனக்கும் ஓர் நாள்  ...! 
பரிசுகள் பரிமாறிக்கொள்ள வேண்டும்...! 
பூக்கள் சூட்டிட வேண்டும்..!   
நாளெல்லாம் காதலில் திளைத்திட  வேண்டும்...!  
பொழுதெல்லாம் ஒன்றாய் கழித்திட வேண்டும்...!   
கன்னத்தோடு கன்னம் சேர்ந்திட  வேண்டும்..! 
முத்தத்தில் மூழ்கிட  வேண்டும்...! - என்றார்கள் 
காதலர்தினமாம்....! - காதலர்களுக்கான  தினமாம்...!    
உனக்கும் எனக்கும் ஓர் நாள்தானா...? 
ஒவ்வொரு  நாளும்தான் என்பதை அறியாதோர்...!  

Friday, February 10, 2017

மேக கூட்டமில்லை - என் காதல்
காற்றடித்தால் கலைந்து போவதற்கு
மாறாய் கடும் பாறையுமில்லை
அடை மழை பொழிந்தாலும் - கரையாமல்
கல்லாய் நிர்ப்பதர்க்கு ...!
காற்றடித்தாலும்..!
மழை பொழிந்தாலும்
தேனீயாய் -உனை
வந்து சேரும்  மகரந்த துகள்
என்பேன்  பூவே எனை...!
கரைந்து போவாய் என்று தெரிந்தும்...!
மனதுக்குள்ளேயே கட்டிய மணல்  வீடு - நீ
காலம் எனும் கடலலையில்
கரைந்தே போனாலும்
நீயும் நானும்
பழகிய நிஜத்தின் நிமிடங்கள்
மிச்சம் இருக்கும் - உள்ளத்தில்
கரைந்து விடாமலே...!
உனக்கு பிடிக்காத எதையும்
உன்னிடம் திணிக்கமாட்டேன் - அது
நானாக  இருந்தாலும்...!

நீ
தந்துவிட்ட போதும்
போதாமல் மீண்டும் கேட்பேன் - அது
நீயாக இருந்தாலும்...!

நீ
வேண்டாம் என்று
சொன்னாலும் விலகி
போவேனே தவிர
மறந்து போக  மாட்டேன்....!
உயிரே....!









Monday, January 30, 2017




பொன்
மஞ்சளும்
குங்குமம் சந்தனம்
பூசிய உன்
மென் வதனம் அதில்
மெல்லிய
தென்றலாய் வீசிய  
உன்
அழகில் நான்
மதி மயங்கித்தான்
போனேனடி.....

உன்
இருள் சூழ்ந்த
சுருள் குழல் வனத்திலே
தொலைந்துபோன கரும்
புரவியானேனே....

மார்கழி
நடுநிசி இரவினில்
பொழிந்திடும்
பனியினில் பளிச்சென
மலர்ந்திட்ட மலரானேனே
உன்
சிரிப்பில்....!

உன்
மை பூசிய விழிகளின்
கருமையின் அழகினில்
மயங்கிய சூரியன்
இருள் சூழ்வதாய் – கண்டு
மாலை  வரும் முன்னே
மறைந்தே போனதடி....!
காதலியே...! 

  

Friday, January 27, 2017

நீ இல்லை
நீ  இல்லாதது போலில்லை
நீ என் நினைவில் கூட இல்லை
நினைத்து பார்க்க நேரமும் இல்லை...
நீ பிரிந்து  போய்
நீண்ட நாட்களை கடந்ததாய் சொன்னார்கள்
நீ இருந்த இடங்களில்  தேடிடவில்லை  
எப்படி தேடிடும்....
இதயத்தில் இருப்பவரை
இதயம் தேடிடுமா....? என்று
எனக்கு  நானே சமாதானம்
சொன்னாலும்...!
தொண்டைக்குள் சிக்கிய
முள் சில நேரம்
வலிக்கத்தான் செய்கிறது....  






Saturday, January 7, 2017

நீ
விழிக்கிற வரையில் - உனையே
பார்த்திருப்பேன் -உன்
நித்திரையை
ரசித்திருப்பேன்....
நீ
துயிலெழும் நேரத்திலே
உனை விழிக்க செய்வேன்
சிட்டுக்குருவிகள்
சிணுங்கள் ஓசை கொண்டு....!
உன்
தூக்கம் இன்னும்
மிச்சம் இருந்தால்
மீண்டும் தூங்க வைப்பேன்
தோள்மீது தாலாட்டி
என் அன்பு மகளே.....!!!!